கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டி உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், நாளை (ஜன.12) விஜய் நேரில் அழைத்து விசாரிக்கவுள்ள சிபிஐ. இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரூர் தீர்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்திற்க்கு சென்சார் வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில் படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளது. இந்த விசாரணையும் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது.

இருப்பினும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் நோக்கில், சென்சார் வழங்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் கட்சியின் முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனா மீது விஜய் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக அரசின் SIT விசாரணையையே சமாளிப்போம் என்று விஜய் எவ்வளவோ கூறியும் ஆதவ் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சிபிஐ விசாரணை கோரினார். இதில் விஜய் நினைத்தது போலவே, சிபிஐ விசாரணை தவெகவுக்கு எதிராக திரும்பியிருப்பதாகவும் இதனால், நேரடியாகவே ஆதவ்வை கடிந்து கொண்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version