Close Menu
    What's Hot

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பார்வையாளர்களை கவர்ந்த நாணய கண்காட்சி..
    தமிழ்நாடு

    பார்வையாளர்களை கவர்ந்த நாணய கண்காட்சி..

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dindukal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல்லில் முதல் முறையாக தேசிய அளவிலான விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி நடைபெற்றது. பண்டைய மன்னர்களின் நாணயங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.

    திண்டுக்கல்லில் ரோட்டரி சங்கம் மற்றும் நாணயங்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து முதல் முறையாக தேசிய அளவிலான நாணயங்கள் மற்றும் பழங்கால முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பணத்தாள்கள், பழமையான பொருட்கள், அஞ்சல் தலைகள், வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் வெளிநாட்டு கரன்சிகள், மற்றும் பழங்கால மரம், தாமிரம், இரும்பான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

    இது குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் பேசும்போது, தற்காலத்தில் பிட் காயின், டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாணயம் பயன்பாடு குறைந்து வருகிறது.
    இன்னும் 10 ஆண்டுகளில் நாணயம் பயன்பாடு அழிந்துவிடும். வரும் தலைமுறைகள் இந்த நாணயம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் மதிப்பினை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரிய நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    நாணயம் சேகரிப்பாளர் கோவையை சேர்ந்த சாம்சன் கூறுகையில், நான் எம்.காம் பட்டதாரி. என் தாத்தா பழங்கால நாணயம் சேகரித்து வந்தார். அதனால் நான் 10 வது வயதிலிருந்தே நாணயம் சேகரிப்பில் ஆர்வம் வந்தது. 20 வயதில் இருந்து முழு நேர நாணயம் சேகரிப்பில் ஈடுபட்ட்டேன். 2 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்கள் சேகரித்துள்ளேன். சங்ககால மன்னர்கள், சேரன், செங்குட்டுவன், சோழன். பாண்டியன், மலையம்மான் உள்ளிட்ட இந்தியாவில் ஆண்ட 200 மன்னர்களின் நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன். அதேபோல் வெளிநாட்டு பழமையான கரன்சிகள் சேகரித்து வைத்துள்ளேன். 25 வருடமாக இந்தியா முழுவதும் பல்வேறு நாணய கண்காட்சியில் பங்கேற்றுள்ளேன். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் இது வரவேற்பு பெற்றுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை மண்ணின் அசல் கலைஞன்… ‘ரோபோ’ சங்கர் பெயர் வந்தது எப்படி..?
    Next Article மோடியின் தொழில் மகள்’ – பாஜகவின் புதிய திட்டம்
    Editor TN Talks

    Related Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: அதிர்வில் குலுங்கிய புற்றுநோய் மருத்துவமனை! 211 குழந்தைகள் அவசரமாக வெளியேற்றம்!

    நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச், கேமரா பேனாக்களுக்கு தடை: எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் எச்சரிக்கை!

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.