சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 25கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

 இதன் பின்னர் பி.ஆர்.பாண்டியன்,  காவிரி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட சட்ட பிரச்சனைகளை நீதிமன்றம் மூலமாக அவசர கால தீர்வு காண்பதற்கு சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

 மேகதாட்டு அணை கட்டுவதற்கு வரவு திட்ட அறிக்கை தயாரிக்க உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருப்பது சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த மறுசீராய் மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்.

 கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை பெற்று தர ஆணையம் முன்வர வேண்டும்,

 ஜூன் 12ல் 100 அடிக்கு மேல் நிரம்பிய பிறகு அணையைத் திறந்து பாசனத்திற்கு விடுவிக்க வேண்டும் எனக் கூறினார்.

 முல்லை பெரியாறு அணை 142 அடி தேங்கிய பிறகுதான் தண்ணீரை திறக்க வேண்டும் என்றார்.

 திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 136 அடியிலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை மண்டலத்திற்கு பாசன பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 பேபி அணையை பயன்படுத்தி 152 அடிகொள்ளளவு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  142 அடி நிரம்பிய பிறகுதான் பாசனத்திற்கும் வெள்ளகாலத்திலும் தண்ணீரை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 பனை தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார்

 கடன் தள்ளுபடி செய்வதற்கு முன்னதாக கடன் வசூல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

 நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கி இருப்பதால் அதற்கான உரிய காலம் அவகாசம் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என முதல்வரிடம் கூறியதாகவும்

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் அதிகாரிகள் தான் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்களே தவிர, நான் அவகாசம் கோரவில்லை எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version