கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து, சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறியிருந்த தங்கம் விலை, இன்று எதிர்பாராத விதமாக ‘ராக்கெட்’ வேகத்தில் சரிவைக் கண்டுள்ளது. நகைப்பிரியர்களுக்குப் பெரும் இனிப்பான செய்தியாக, இன்று ஒரே நாளில் தங்கம் விலை மிரளவைக்கும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து இன்ப அதிர்ச்சியளித்தது. ஆனால், மாலை நேர வர்த்தகத்தில் நிலைமை தலைகீழாக மாறி, மேலும் ரூ.2,240 சரிந்தது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.7,600 வரை குறைந்து, சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி சரிவைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.12,670 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,01,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஒரு லட்சத்து பத்து ஆயிரம் ரூபாயைத் தாண்டி உச்சத்தில் இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மேற்காசியப் போர்ச் சூழலில் நிலவும் சில பொருளாதார நகர்வுகள் இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
