சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று (மார்ச் 30) அதிரடியாகக் குறைந்து சற்று நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்ததன் எதிரொலியாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ,60 குறைந்து, ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது.
கடந்த 29ம் தேதி சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது இதேபோல், வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்றும் வெள்ளிவிலையில் மாற்றமில்லை.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், இன்றைய இந்தச் சரிவு நகை வாங்குவோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களே இந்த விலை மாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
