கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று (மே 19) திடீரென அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,120 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,870-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ஒரே நாளில் ரூ.960 வரை உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,18,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.3,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகளாவிய பொருளாதாரக் காரணிகளால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி திரும்புவது போன்ற காரணங்களே இந்த திடீர் விலையேற்றத்திற்குக் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
