Close Menu
    What's Hot

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர் தேர்வெழுத உயர் நீதிமன்றம் அனுமதி!
    தமிழ்நாடு

    ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர் தேர்வெழுத உயர் நீதிமன்றம் அனுமதி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0017
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேச விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவன மாணவர் அஸ்லாம், தேர்வெழுத சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் படித்து வந்த அஸ்லாம், சயீத், நஹல் இப்னு ஆகிய மூன்று மாணவர்கள், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, தேர்வுக்கு முந்தைய நாள் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து மாணவர் அஸ்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் உதவிப் பதிவாளரான அவினவ் தாக்கூர் மீது பாலியல் புகார் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தான் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் அஸ்லாம் குறிப்பிட்டிருந்தார். சமூகப் பணி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில், தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீக்கப்பட்டதாகவும் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி, மனுதாரர் மீது யூகத்தின் அடிப்படையில் மட்டுமே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முதலாம் ஆண்டில் அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    எனவே, மாணவர் அஸ்லாமை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, மனு குறித்து ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Chennai High Court
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலாட்வியாவில் மகாத்மா காந்தி சிலைக்கு கனிமொழி எம்.பி மரியாதை!
    Next Article ’மாமன்’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்… எந்த ஓடிடி? எப்போது?…
    Editor TN Talks

    Related Posts

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    June 13, 2026

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.