Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!
    தமிழ்நாடு

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    Editor web2By Editor web2July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rowdy Vijayakumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில், போலீசாரை கத்தியால் தாக்கிய ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குன்றத்தூர் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் ஏ+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ள கருப்பு என்ற தமிழழகு (27) மீது கஞ்சா கடத்தல், இரட்டை கொலை உள்ளிட்ட மொத்தம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில், தனது நண்பர் சூர்யாவுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழழகை கைது செய்ய முயன்றனர்.

    அப்போது போலீசாரைக் கண்ட தமிழழகு, தப்பிக்க முயன்றதுடன், காவலர் விஜயகுமாரை கத்தியால் தாக்கினார். இதில், காவலர் விஜயகுமாரின் வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தற்காப்பு நடவடிக்கையாக தமிழழகின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். குண்டு காயமடைந்த தமிழழகை போலீசார் மடக்கிப் பிடித்து, உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையில் தப்பி ஓடிய அவரது நண்பர் சூர்யாவையும் போலீசார் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர்.

    போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்பவரைக் கொலை செய்யும் நோக்கில் தமிழழகும், சூர்யாவும் இணைந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்துள்ளது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    ChennaiCrime CountryBombPlot HistorySheeter TamilNaduPolice
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!
    Next Article மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி
    Editor web2
    • Website

    Related Posts

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    July 19, 2026

    தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்வு

    July 19, 2026

    கடலூர்: விவசாயிகளிடம் லஞ்சம்… நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம் – அமைச்சர்  வெங்கடரமணன் அதிரடி!       

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மசோதாக்கள், அரசியல் மோதல்கள் என அனல் பறக்கும் அமர்வு

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    சென்னையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…  20 பேர் பாதுகாப்பாக மீட்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.