Close Menu
    What's Hot

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆக்ரமிப்பு செய்யப்பட்ட திருவண்ணாமலை கோயில் சொத்துகள்…
    தமிழ்நாடு

    ஆக்ரமிப்பு செய்யப்பட்ட திருவண்ணாமலை கோயில் சொத்துகள்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 999015 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பது தொடர்பான வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவில்கள் மிகவும் பழமையானவை, பிரசித்தி பெற்றவை. தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி சுப்பையா என்பவர் தனது வருமானத்தில் 8ல் ஒரு பங்கை தூத்துக்குடி சித்தி விநாயகர் கோவிலுக்கும், மற்றொரு பங்கை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மடம் கட்டுவதற்கும் என வழங்கியுள்ளார்.

    அதோடு கோவிலின் பெயரில் ஏராளமான சொத்துக்களையும் வாங்கியுள்ளார் “சுப்பையா தர்ம நிதி டிரஸ்ட்” எனும் பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் தொடங்கி 1934 ஆம் ஆண்டிலேயே 28,540 ரூபாயை அந்த கணக்கில் வரவு வைத்து, சொத்து மற்றும் கணக்கில் உள்ள தொகை மற்றும் அதன் வட்டியை கோவிலில் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹரி சுப்பையாவால் கோவிலுக்கென வாங்கப்பட்ட ஏராளமான சொத்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே “சுப்பையா தர்மநிதி டிரஸ்ட்-டிற்கு சொந்தமான சொத்துக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில், தூத்துக்குடி அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு பராமரிக்க உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், நில நிர்வாக ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?
    Next Article சட்டவிரோத குவாரி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    June 13, 2026

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    June 13, 2026

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.