Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»காரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?
    அரசியல்

    காரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vikatan 2024 10 10 gs1ilbqo IMG20241009162107
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காரைக்குடி மாநகராட்சி மேயர் எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு மாநகராட்சி சிறப்பு கூட்டத்தை கூட்ட உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியைச் அதிமுக கவுன்சிலர் ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

    “நான் காரைக்குடி மாநகராட்சியின் 22 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருக்கிறேன்.
    காரைக்குடி மாநகராட்சியினல் 36 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு கவுன்சிலர் ராஜினாமா செய்து விட்டதால் 35 கவுன்சிலர்கள் காரைக்குடி நகராட்சியில் உள்ளனர். அவர்களின் 23 கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளோம். காரைக்குடி மாநகராட்சியின் மேயரின் தகுதியின்மை, பொதுமக்களின் திருப்தின்மை, கடமைகளைச் செய்ய தவறுதல் ஆகிய காரணங்களால் கவுன்சிலர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

    ஆகவே மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான கூட்டமும் கூட்டப்படவில்லை. இது தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது. கவுன்சிலர்கள் மனு அளித்த 30 நாட்களுக்குள்ளாக மாநகராட்சி ஆணையர் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆனால் காரைக்குடி நகராட்சியில் ஆணையர் கூட்டத்தைக் கூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே காரைக்குடி நகராட்சியின் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவது (ரகசிய வாக்கெடுப்பு மூலம்) தொடர்பாக சிறப்பு கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி அளித்துள்ள உத்தரவில், மனுதாரர் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்துள்ள புகார் மனுவின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளாட்சி விதிகளுக்கு உட்பட்டு ரகசிய வாக்கெடுப்பு மூலம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கோரும் ஆதவ் அர்ஜுனா
    Next Article ஆக்ரமிப்பு செய்யப்பட்ட திருவண்ணாமலை கோயில் சொத்துகள்…
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026

    “கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்

    August 7, 2026

    ’மத்திய அரசிடம் தவெக அரசு சத்தமில்லாமல் சரணாகதி’

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.