நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதற்கான மூன்று முக்கிய வாக்குறுதிகளும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நீட் தேர்வு மாணவர்களின் சுமையைக் குறைக்கும், வணிகமயமாக்கலை ஒழிக்கும் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மூன்று நோக்கங்களிலுமே நீட் முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளதுடன், பள்ளிகளில் நடைபெறும் கற்றல் முறையைத் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானதுமாகும். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version