தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சோடு இயங்கி வருகின்றன. இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ஐ.டி ரைடு நடந்து வருகிறது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் படத்தில் பதிவு ஒன்றே போற்றி போட்டிருக்கிறார். அதில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்ற இந்த சூழலில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் முடக்கி வைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும் ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும் எதிர்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் எனவும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை ஒடுக்குவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய உள்ள சூழலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தொகுதிக்குள் தன்னை முடக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் குறிப்பிட்டு இருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
