Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது”!. விஜய் ஆவேசம்!
    தமிழ்நாடு

    “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது”!. விஜய் ஆவேசம்!

    Editor web3By Editor web3January 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

    சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

    இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை. தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.

    கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை.

    இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

    ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்காளர் பட்டியல் திருத்தம்!. நாளையுடன் கால அவகாசம் நிறைவு!
    Next Article திமுகவுக்கு பின்னடைவு!. கூண்டோடு அதிமுகவில் இணைந்த 2000 பேர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    July 7, 2026

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    July 7, 2026

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ; 59.31 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்வு- அரசு தகவல்

    முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு பதிவு – திமுகவினர் 2 பேர் கைது!

    சொத்து கணக்கு: செந்தில் பாலாஜி வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு!

    மீனாட்சி அம்மன் கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் யார் யார்? – அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

    வயநாடு அருகே நிலச்சரிவு – மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.