Close Menu
    What's Hot

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை… 18 நாட்களுக்குப் பிறகு இன்று தொடக்கம்
    தமிழ்நாடு

    தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை… 18 நாட்களுக்குப் பிறகு இன்று தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    omni
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்து சேவைகள், 18 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    கடந்த 7-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், அந்த மாநில போக்குவரத்து துறையால் சிறைபிடிக்கப்பட்டு 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கர்நாடக மாநில போக்குவரத்து துறையும் 60க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொரு பேருந்துக்கும் ரூ.2.2 லட்சம் வரை அபராதம் விதித்து, மொத்தம் ரூ.1.15 கோடி வரை வசூலித்துள்ளது.

    இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம், 2021 மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மீட்டின்படி தமிழ்நாட்டில் இன்று வரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கிறார்கள். எனவே நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் 230 ஆம்னி பேருந்துகளை கடந்த 21 நாட்களாக இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தோம்.

    கடந்தத நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளும் இயக்காமல் கடந்த 18 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டிற்கு தமிழ்நாடு 1 லட்சத்து 50 ஆயிரம் சாலை வரி விதித்தது. AITP 90 ஆயிரம் மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலை வரி சுமாராக 2 லட்சம், ஆக மொத்தம் காலாண்டுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியும் பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து, கோரிக்கை வைத்தோம்.

    மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 1,350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், தினசரி 25,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்து, உரிமையாளர்களுக்கு தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 21 நாட்களில் மொத்தம் ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்திருந்தனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. தற்போதும் போக்குவரத்து துறை ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆணையரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் முதலமைச்சர் ஆலோசனை பெற்று நல்ல ஒரு முடிவை ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

    அரசு இதனை பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ள நிலையில் பயணிகள் நலனையும், ஐயப்பன் கோயில் பக்தர்கள் நலனையும் கருத்தில் கொண்டு, வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, வெளிமாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று (நவ.28) மாலை முதல் வழக்கம்போல் இயக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
    Next Article விரைவில் பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ள இந்திய ரயில்கள்…! லிஸ்ட் இதோ…
    Editor TN Talks

    Related Posts

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    July 31, 2026

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    நாகை : காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..! நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.