Close Menu
    What's Hot

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்கள்!. நூலிழையில் தப்பிய பகீர் சம்பவம்!.
    தமிழ்நாடு

    கார் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்கள்!. நூலிழையில் தப்பிய பகீர் சம்பவம்!.

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sivagangai accident cctv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியதில், சாலையில் நின்று கொண்டிருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சிங்கம்புணரி மேல தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கார், மேலத்தெரு பகுதியிலிருந்து சந்திவீரன் கூடம் நோக்கி அதிவேகமாக வந்துள்ளது. மேலூர் சாலைக்குத் திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சுமதிபுரத்தைச் சேர்ந்த வடிவேல், மனப்பட்டியைச் சேர்ந்த ஜீவா, அங்குள்ள தேநீர்க்கடைக்கு வெளியே நின்றிருந்த கீழத்தெருவைச் சேர்ந்த தையல் கலைஞர் வடிவேல், அவரிடம் பேசிக்கொண்டிருந்த வேளார் தெருவைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் அவரது மகன் நவீன் ஆகிய 5 பேர் மீது கார் பலமாக மோதி, அவர்களைத் தூக்கி வீசியது. அத்துடன் நிறுத்தாமல், அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி, அதை உடைத்துக்கொண்டு கார் நின்றது.

    விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்களும் வியாபாரிகளும், உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், தலையில் பலத்த காயமடைந்த மீனாட்சி, கையில் முறிவு ஏற்பட்ட அவரது மகன் நவீன் மற்றும் தையல் கலைஞர் வடிவேல் ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிங்கம்புணரி காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய காரின் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கார் மோதி 5 பேர் தூக்கி வீசப்படும் இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவறு செய்தால் கடும் நடவடிக்கை!. அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் வார்னிங்!
    Next Article புதுச்சேரியில் ரூ.13,397 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு! 
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    July 28, 2026

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    July 28, 2026

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!

    சட்டவிரோத பட்டாசு தயாரிப்பா… கூப்பிடுங்க 96009 69100 – விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு!  

    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    தமிழ்நாடு அரசு இயற்கை வளங்களை பாதுகாத்து வருகிறது – அமைச்சர் டாக்டர். TK. பிரபு பெருமிதம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.