தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்படும். இந்த முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்தப் பட்டியலில் இடம்பெறாத மாணவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்:

யார் பதிவிறக்கம் செய்யலாம்? மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து தங்களது திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அசல் மதிப்பெண் சான்றிதழ்: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறிய www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version