காஞ்சிபுரத்தை சேர்ந்த 16-வது மாணவி ஒருவர் பள்ளி விடுமுறை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே கல்பட்டு கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று இரவு தனியாக இருந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 8பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மிரட்டி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது.
பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கு வந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, மாணவியை அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இளைஞர்களைத் தேடி வருகிறனர். மேலும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின்பேரில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
