Close Menu
    What's Hot

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவிரி ஆற்றில் மணல் கடத்த ரகசிய பாலம்!. அதிரடியாக இடித்து தள்ளிய போலீசார்!
    தமிழ்நாடு

    காவிரி ஆற்றில் மணல் கடத்த ரகசிய பாலம்!. அதிரடியாக இடித்து தள்ளிய போலீசார்!

    Editor web3By Editor web3July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parmathi sand bridge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி ஆற்றில் நிகழ்ந்த சட்டவிரோத செயலைத் தடுத்த போலீசார், மணல் கடத்தலுக்காக தனியாக கட்டப்பட்டிருந்த கான்கிரீட் பாலத்தை அதிரடியாக இடித்து தள்ளியுள்ளனர்.

    அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட காவிரிப் படுகைகளில் நீண்ட காலமாகவே மணல் திருட்டு நடைபெறுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் நள்ளிரவு தாண்டி அதிகாலை 3 மணி வரையிலான நேரங்களில், பைக் மற்றும் மினி ஆட்டோக்களைப் பயன்படுத்தி ஆற்றுக்குள் சென்று மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு திருடப்படும் மணல் ஒரு மூட்டை 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையில், நன்செய் இடையாறு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 15 அடி நீளத்தில் கான்கிரீட்டைக் கொண்டு தற்காலிகப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆற்றுக்குள் வாகனங்கள் எளிதாகச் சென்று வர ஏதுவாகவே இந்த ரகசியப் பாலம் போடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து முதலில் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பலன் கிடைக்காததால், பரமத்தி வேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாகக் களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படையினர், அந்த இடத்தைப் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய போலீசார், மணல் கடத்துபவர்களுக்கு உதவியாக இருந்த அந்த கான்கிரீட் பாலத்தை முற்றிலுமாக உடைத்துத் தரைமட்டமாக்கினர். இவ்வளவு பெரிய பாலத்தைக் கட்டியது யார், இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆற்றின் நடுவே பாலமே அமைத்து மணல் கொள்ளை அடித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

    Cauvery river paramathi vellore police sand smuggling Secret bridge
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்!. முதல்வருக்கு திருமா வலியுறுத்தல்!
    Next Article மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: சரிந்த அப்பார்ட்மெண்ட்..!! 8 பேர் பலி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    July 31, 2026

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    July 31, 2026

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    Gen Z தலைமுறையை மிரட்டல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அமைதிப்படுத்த முடியாது!. ராகுல் காந்தி அட்டாக்!

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் என்ன? தமிழக அரசுக்கு நிதி திரட்ட புதிய முயற்சி!

    டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை விளம்பர பலகை..!! சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு..!!

    காவல் நிலையத்தில் ஆஜர்: 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில்பாலாஜி மனு

    காவிரி உரிமையை காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வருக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.