Close Menu
    What's Hot

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு!. உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!
    தமிழ்நாடு

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    Editor web3By Editor web3May 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk velumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தடையையும் மீறி, கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிரடியாகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    அதிமுக-வில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வெற்றிகரமாகக் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கி, உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டக் கோரி  அழுத்தத்தைக் கொடுக்க வேலுமணி தரப்பு தீவிரமாகத் தயாராகி வருகிறது.

    பொதுக்குழுவைக் கூட்டுவது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை மற்றும் கோவையில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக, “கட்சியில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கூறி வேலுமணி தரப்போ அல்லது வேறு யாராவதோ வந்து கையெழுத்து கேட்டால், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் அதில் கையெழுத்திடக் கூடாது” என்று இபிஎஸ்  எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.
    Next Article திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி
    Editor web3
    • Website

    Related Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    July 4, 2026

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    July 4, 2026

    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு!. உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தற்கொலைப்படை தாக்குதலால் அதிர்ந்த பாகிஸ்தான்..!! 30 ராணுவ வீரர்கள் பரிதாப பலி..!!

    இனி சும்மா இருக்கக்கூடாது..!! இபிஎஸ் எடுத்த முக்கிய முடிவு..!! புதுக்கோட்டை அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகள்..!!

    சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா முறைகேடு வழக்கு!. உயர்நீதிமன்றம் கெடு விதிப்பு!

    ராணிப்பேட்டை : ஆசிரியர் தகுதி தேர்விற்கு தாமதமாக வந்த பெண்..! அதிகாரிகளிடம் கெஞ்சிய காட்சி வைரல்..! 

    த்ரிஷா குறித்த பேச்சு – பாஜகவைப் பார்த்து பயப்படுகிறார் விஜய் – அனிதா ராதாகிருஷ்ணன் பஞ்ச்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.