Close Menu
    What's Hot

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி: இபிஎஸ் கடும் கண்டனம்
    தமிழ்நாடு

    பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலி: இபிஎஸ் கடும் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருத்தணி அருகே பள்ளியில் சுவர் இடிந்து மாணவன் பலியான சம்பவத்திற்கு, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?

    பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு பொம்மை முதல்வர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்தப் பதிவில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
    Next Article அரசுப் பள்ளி மாணவர்களைக் காவு வாங்கும் திமுக அரசு… மாணவன் பலியான சம்பவத்தில் நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    Editor TN Talks

    Related Posts

    இன்றைய தங்கம் விலை என்ன?. லேட்டஸ்ட் அப்டேட் இதோ!.

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மது அருந்தினார்களா இங்கி. வீரர்கள்? ஆஷஸ் தொடரில் புதிய சர்ச்சை!

    இந்திய சுற்றுப்பயணம்: நியூசி. அணி அறிவிப்பு!

    போண்டி துப்பாக்கிச்சூடு எதிரொலி!. ஆஸி-யில் புதிய துப்பாக்கிச் சட்டம் அமல்!.

    உஷார்!. அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா?. மூளைக்கு 5 மடங்கு பாதிப்பு!.

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    Trending Posts

    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    இபிஎஸ் இருக்கும்வரை அதிமுக வேண்டவே வேண்டாம்… ஓபிஎஸ் திடீர் பல்டி

    December 24, 2025

    அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோளை சுமந்து இன்று (டிச. 24) விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

    December 24, 2025

    2வது T20: இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி

    December 24, 2025

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.