Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா – சு வெங்கடேசன் காட்டம்!!!
    தமிழ்நாடு

    பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா – சு வெங்கடேசன் காட்டம்!!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025Updated:November 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251125 230225
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எழுத்தாளரும் இந்திய மக்களவை அமைச்சரான சு வெங்கடேசன் அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஒரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் குறைகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுத்து வைத்துள்ளார்.

    IMG 20251125 230217

    சு வெங்கடேசன் அவர்கள் முன்னெடுத்து வைத்த குறைகளும் கோரிக்கைகளும் :

    ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே பட்ஜெட்டில், 2024- 25 நிதியாண்டில் புதிய வழித்தடத்திற்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை 31,458. இதில் தெற்கு ரயில்வே துறைக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை 301 கோடி மட்டும்தான். அதாவது மொத்தமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையில் இது வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடிகளை கொடுத்து தெற்கு ரயில்வே துறையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு வெறும் ஒரு சதவீதம் தருவது முறையல்ல.

    மேலும் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மூத்தவர்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் திருத்தலங்களுக்கு மூத்தோர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர் எனவே அதை விரைவில் மீண்டும் வழங்க வேண்டும்.

    கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பயணக்கட்ட சலுகைகளும், அபராத ரத்து செய்ய முடிவுகளும் கேள்விக்குறியாக உள்ளன. பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்யான தகவல் கிடைப்பதில்லை.

    தமிழகம் மற்றும் கேரளாவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடக்கிறது. அதேபோல மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இரண்டாவது முனையம் அவசியம் கொண்டு வரவேண்டும். இந்த இரண்டு நகரங்களில் பிளாட்பாரங்கள் மிகவும் கூட்டு நெரிசலுடன் காணப்படுகின்றன. எனவே கோயம்புத்தூரில் போத்தனூரில் இரண்டாவது முனையமும், மதுரையில் உள்ள கூடல்நகரில் இரண்டாவது முனையமும் அமைய வேண்டும்.

    சமீபத்தில் செம்மங்குப்பத்தில்நடந்த பள்ளி குழந்தைகள் உயிரெழுப்பு மற்றும் விபத்துக்கள் போன்றவை ஏற்பட முக்கிய காரணம் செய்யாத ரயில் கேட்டுகளால் தான். எனவே ரயில் பாதுகாப்பிற்கு இன்டர்லாக் செய்யாத ரயில் கேட்டுகளை அனைத்தையும் இன்டர் லாக் வசதி கொண்ட ரயில் கேட்களாக மாற்றி அமைக்க போதுமான நிதி வழங்க வேண்டும்.

    கொல்லம் நாகூர் விரைவு ரயில் மீண்டும் கொண்டுவர வேண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் சு வெங்கடேசன் அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு தன் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

    Coimbatore Kerala Madurai Railway Su venkatesan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி திமுக அரசை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன் !!!
    Next Article 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடை – மலேசியா அதிரடி !!!
    Editor TN Talks

    Related Posts

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    May 19, 2026

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    May 19, 2026

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

    தோல்விகளை மக்கள் மீது சுமத்துவதே மோடி அரசின் வேலை!. கார்கே கடும் கண்டனம்!.

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.