Close Menu
    What's Hot

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை: சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை: சிறப்பு அமர்வுகள் அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksApril 30, 2026Updated:April 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வுக்கு இன்று முதல் மே 31ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்டுள்ளார்.

    விடுமுறை காலத்திலும் அவசர வழக்குகள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் “விடுமுறை கால அமர்வுகள்” (Vacation Benches) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமர்வுகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளுக்கான மனுக்களை, வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ். சவுந்தர், எல். விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, பி. தனபால், என். செந்தில்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன், ஆர். சக்திவேல், முகமது சபீக் ஆகியோர் விடுமுறை கால அமர்வுகளில் அவசர வழக்குகளை விசாரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், மதுரை அமர்வில் நீதிபதிகள் பி. வேல்முருகன், எஸ். ஸ்ரீமதி, சி. குமரப்பன், ஜி.கே. இளந்திரையன், கே.கே. ராமகிருஷ்ணன், கே. ராஜசேகர், டி. பரத சக்கரவர்த்தி, ஆர். விஜயகுமார், ஆர். பூர்ணிமா, ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, கே. முரளி சங்கர், பி. வடமலை ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நீதித்துறை நடவடிக்கைகள் இடையூறு இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அவசர தேவைகளுக்கேற்ப மனுக்களை குறிப்பிட்ட நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் வழக்கு உட்பட முக்கிய வழக்கு நீதிபதிகள் மாற்றம்!
    Next Article பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
    Editor TN Talks

    Related Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026

    தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    தாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.