தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 9 மணி நிலவரத்தோடு ஒப்பிடுகையில், அடுத்த நான்கு மணி நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் மிகத் தீவிரமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால், மதிய உணவிற்குப் பிறகும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறையாமல் காணப்படுகிறது.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வத் தகவல்கள், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலை விட இந்த முறை மக்களிடையே எழுந்துள்ள கூடுதல் ஆர்வத்தைப் பிரதிபலிக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும், வாக்கு சதவீதத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி உயர்வு, தேர்தல் ஆணையத்தின் இலக்கான 85% வாக்குப்பதிவை எட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நீடிக்க உள்ள நிலையில், மீதமுள்ள நேரங்களில் நகர்ப்புற வாக்காளர்களின் வருகையும் அதிகரிக்கும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
மேலும், முதலமைச்சர் வேட்பாளர்கள் தொகுதிகளில் 1 மணிக்கு வாக்குப்பதிவு நிலவரத்தின் அடிப்படையில், திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 56.59%, அதிமுகவின் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 60.98%, காரைக்குடி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீமானின் தொகுதியில் 51.36%, தவெக வேட்பாளர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் 56.24%, தவெக வேட்பாளர் விஜய்யின் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 55.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
