Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை!. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!
    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை!. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

    Editor web3By Editor web3December 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edappadi palanisamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முகாந்திரம் இல்லை எனவும் முடித்து வைக்கப்பட்டதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என். ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்து, தான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மனுதாரரின் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. இதில், புகாரில் முகாந்திரம் இல்லை என தெரியவந்ததை அடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து, உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளிக்கும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ஷாக்” அடிக்கும் முட்டை விலை… மீண்டும் உயர்வு
    Next Article மகாத்மா பெயர் நீக்கத்தை கண்டித்து டிச.18ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!. செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    டாஸ்மாக் கடைகளுக்கு கெடுபிடி!. மீறினால் ரோந்து போலீசார் மீது நடவடிக்கை!

    May 17, 2026

    கமல் எப்பவுமே இப்படித்தான் செய்றாரு – பொறுமும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

    May 17, 2026

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.