Close Menu
    What's Hot

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»வடகலை, தென்கலை ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள்… மோதலில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்…
    தமிழ்நாடு

    வடகலை, தென்கலை ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள்… மோதலில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என, இரு பிரிவினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோவில் விழாக்களின் போது, கோவிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோவில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோவிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 1918 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது. தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    மேலும், இந்த கோவில் விழாக்களின் போது வடகலை – தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடக்க, கோவில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள். இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை. இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை தவிர்த்து, ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும் என இரு பிரிவினருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் மா.சுப்ரமணியன் மீது நில அபகரிப்பு புகார்… 24-ம் தேதி பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு…
    Next Article சிவகங்கை : மாணவர்களுடன் மதிய உணவருந்திய துணை முதல்வர்… விளையாட்டு விடுதியில் ஆய்வு…
    Editor TN Talks

    Related Posts

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    June 16, 2026

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    June 16, 2026

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    MLA-க்களுக்கான புத்தாக்க பயிற்சி..!! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

    குலுங்கிய இந்தோனேசியா..!! நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு..!!

    தமிழ்நாட்டை உலுக்கிய கும்மிடிப்பூண்டி வழக்கு..!! பீகார் இளைஞனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    தவெக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிராக வழக்கு..! ஊழல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு..!

    ஸ்லோவாக்கியாவில் பிரதமர் மோடி..!! மாணவர்களின் யோகா சாகசத்தை கண்டு நெகிழ்ச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.