Close Menu
    What's Hot

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“இந்த தேதிலதான் செஞ்சாங்கன்னு யாரு சர்டிபிகேட் கொடுத்தா?. அமைச்சர் கேள்வியால் ஆடிப்போன ஊழியர்கள்!
    தமிழ்நாடு

    “இந்த தேதிலதான் செஞ்சாங்கன்னு யாரு சர்டிபிகேட் கொடுத்தா?. அமைச்சர் கேள்வியால் ஆடிப்போன ஊழியர்கள்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TRICHY minister ramesh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் மற்றும் அதன் விபரங்கள் குறித்து அவர் எழுப்பிய அதிரடி கேள்வி அங்கிருந்த ஊழியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

    கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தார். அப்போது, சில பிரசாத பாக்கெட்டுகளில் அது தயாரிக்கப்பட்ட தேதியோ அல்லது காலாவதியாகும் தேதியோ குறிப்பிடப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளைக் கடிந்துகொண்டார்.

    தொடர்ந்து அங்கிருந்த முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, அதில் தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டிருந்தது. உடனே அந்த ஊழியர்களைப் பார்த்த அமைச்சர், “இந்தத் தேதியில்தான் இந்த முறுக்கு தயாரிக்கப்பட்டது என்பதை யார் உறுதிப்படுத்தியது? இதற்கான சான்று எங்கே?” என்று யாரும் எதிர்பாராத ஒரு நறுக் கேள்வியைக் கேட்டார். அமைச்சரின் இந்தத் திடீர் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

    மறுபுறம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தால் சற்று அதிர்ந்துதான் போயுள்ளனர். பிரசாதங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், “பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கே நேரில் சென்று, அது தயாராகி வெளிவரும் வரை கண்காணித்துத் தேதியிட வேண்டும்” என்று விரைவில் புதிய சுற்றறிக்கை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகளும் உள்ளனர்.

    எது எப்படியோ, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அமைச்சர் காட்டிய இந்த அதிரடி, கோவில் பிரசாத விற்பனையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை வழக்கு: தர்ம முனீஸ்வரன் தான் குற்றவாளி..!! பரபரப்பு தீர்ப்பு..!!
    Next Article தவெக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம்..! கட்டப்பாஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டு..!
    Editor web3
    • Website

    Related Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026

    நயினாருக்கு ‘கல்தா’?… அமித்ஷா முடிவின் பின்னணி… புதிய தலைவர் யார்?

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.