உதகையில் 128 ஆவது மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் 7 லட்சம் மலர்களால் பல்வேறு அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சியின் சிறப்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளது .
நுழைவு வாயில் பகுதியில் மலைகளின் அரசி நீலகிரி என்ற சொல்லிக்கேற்ப பிரம்மாண்ட கிரீடம் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட மலர்கள் நுழைவு வாயில் ,மலர் காட்சி மாடத்தில் 128 வது ” FLOWER SHOW ” என்ற எழுத்துக்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வரைபடம், 10 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை யும் இடம்பெற்றுள்ளன .
மலர் காட்சி திடலில் இரண்டு லட்சம் மலர்களைக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மலர் கண்காட்சியின் முக்கிய அலங்காரமும் திருவாரூர் ஆழித்தேர் வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி மகாபலிபுரம், ஏர் உழவன் மீனவன், மலை ரயில் , நீலகிரியில் மட்டுமே வாழும் தோடர் பழங்குடிகளின் வீடு, மற்றும் கிராமிய கலைகளை போற்றும் வகையில் பரதநாட்டிய மங்கை, தவில், ஒயிலாட்டம், மயில் தோகை, கரகாட்டம், நாதஸ்வரம், இசைக்கலைஞர்கள் நீலகிரி மலை ரயில் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன .
இது மட்டுமின்றி பூங்கா முழுவதும் 50,000 பூந்தொட்டிகளில் 275 வகையான பல வண்ண வண்ண மலர்கள் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு பூத்துக் குலுங்குகின்றன.
அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மலர்கண்காட்சியை காண அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.
