Close Menu
    What's Hot

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Uncategorized»கொடைக்கானல் மலர் கண்காட்சியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – அசத்தும் மலர் உருவங்கள்!
    Uncategorized

    கொடைக்கானல் மலர் கண்காட்சியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் – அசத்தும் மலர் உருவங்கள்!

    Editor web1By Editor web1May 21, 2026Updated:May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 21 17h30m58s414
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான 63-வது மலர் கண்காட்சி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரையண்ட் பூங்காவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் துறையும் தோட்டக்கலைத் துறையும் இணைந்து ஒருங்கிணைத்துள்ள இக்கண்காட்சியைக் காண, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு கண்காட்சியின் சிறப்பம்சமாக, சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வண்ணமயமான கொய்மலர்களைக் கொண்டு பல்வேறு பிரம்மாண்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திண்டுக்கல் நகரின் அடையாளமான ‘திண்டுக்கல் பூட்டு’, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாம்பன் பாலம்’, தமிழரின் கட்டிடக்கலைக்குச் சான்றான ‘தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய கோபுரம்’ மற்றும் வீர விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது’ போன்ற மலர் உருவங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன. இது தவிர, பெண்கள் மேம்பாட்டை வலியுறுத்தும் உருவங்கள், நேரோட்டோ பொம்மை மற்றும் காதலர்களைக் கவரும் வகையில் ‘இரட்டை இதய செல்பி பாயிண்ட்’ எனப் பூங்கா முழுவதும் வண்ணக் கோலமாகத் காட்சியளிக்கிறது.

    vlcsnap 2026 05 21 17h31m10s894

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகக் காலை வேளையில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்பட்டாலும், மாலை வேளையில் நிலவும் இதமான குளுமையான சூழல் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது. மேகக் கூட்டங்களுக்கு இடையே லேசான பனிமூட்டத்துடன் நிலவும் இந்த இதமான காலநிலையை அனுபவித்தபடி, சுற்றுலாப் பயணிகள் மலர் உருவங்கள் முன்பு நின்று ஆர்வத்துடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சி

    பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான மலர்ச் செடிகளும், அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய வகை மலர்களும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

    vlcsnap 2026 05 21 17h30m41s848

    குறிப்பாக, பூங்காவை மேலிருந்து படம்பிடிக்கப்பட்ட ‘கழுகுப் பார்வை’ (Drone View) காட்சிகள், மலர் கண்காட்சியின் முழுமையான அழகைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. விடுமுறை தினங்களை முன்னிட்டுப் பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால், நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரும்பவும் வருவோம்ல..!! முடக்கத்தை மீறி மீண்டும் எழுந்த கரப்பான் பூச்சி கட்சி..!!
    Next Article 5 நாட்டு தலைவர்களுக்கு வித்தியாச பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??
    Editor web1
    • Website

    Related Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.