Author: Editor TN Talks

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. என்.ஆர்.காங்கிரஸ், பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திமுக, காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் அதிகளவில் நடைபெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைக்கக் கூடாது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியதால், கூட்டணி முடிவில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த 19-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று ( 20.03.2026 ) புதுச்சேரி திரும்பினார் முதலமைச்சர் ரங்கசாமி. தொடர்ந்து மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை தயார் நிலையில் வைத்திருந்தார். கதிர்காமம் முருகன் கோயிலுக்கு சென்று வேட்புமனுவை வைத்து சாமி கும்பிட்டு கையெழுத்திட்டவர், தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்புமனுவை கோரிமேடு…

Read More

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு நேற்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியது. அதில், மாதம் 5 முறை ஏ.டி.எம்-ல் பண பரிவர்த்தனையை கட்டணம் இல்லாமல் மேற்கொள்ளலாம், அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.17கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தமிழகத்தில் வாக்கு சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 72,032 வாக்குச்சாவடி மையங்களும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தமிழக காவல்துறை ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்திற்கு இதுவரை 300 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை அடையாளம் காணுவது,  வாக்குச்சாவடி மையங்களில் துப்பாக்கி வேண்டிய காவலர்களை பாதுகாப்பு பணியில்…

Read More

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணிகள் முடிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, விஜய் தலைமையிலான தவெக, சீமான் தலைமையிலான நாதக என 4 முனைப் போட்டி தற்போதுவரை நிலவுகிறது. இதில் தவெக, பாஜகவுடன் கூட்டணி போடலாம் என்னும் பேச்சும் எழுந்துள்ளது. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக பேச்சுவார்த்தைக் குழு முன்னெடுத்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, காங்கிரஸ் கட்சிக்கு 28,  ம.தி.மு.கவுக்கு 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2  சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால்,…

Read More

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்று மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது. வேட்புமனு தக்கல் மார்ச் 30ஆம் தேதி ஏப்ரல் 6ஆம் நாள் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீது ஏப்ரல் 7ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாளாகும். புதுச்சேரியில், மார்ச் 16ஆம் தேதி, வேட்புமனு தாக்கல் தொடங்கி, 23ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மார்ச் 24ஆம் தேதிபரிசீலனை முடிவுற்று மார்ச் 26ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். புதுச்சேரியில் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ஆம் நாள் நடக்கிறது. மே 4ஆம்…

Read More

2021-ல் ஆட்சி அமைத்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றிவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி இன்று (மார்ச் 11) பேசினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் வாழ்வாதை என்டிஏ உறுதி செய்யும் என்றார். 2021-ல் ஆட்சி அமைத்த திமுக, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார். நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்துவதாக கூறிய திமுக உயர்த்தவில்லை என்றும் நெல்லை பாதுகாப்பதற்காக உரிய கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்பதால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் திமுக தாமதப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பணத்திற்கு…

Read More

அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் அப்போது ஹாட் டாப்பிக். சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவி வருகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதன் அடிப்படையில் தற்போது கூட்டணிகள் மாறி மாறி அமைந்து வருகிறது. தற்போதுள்ள ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் அதிமுகவும் முழு வீச்சில் களப்பணி ஆற்றி வருகின்றன. இந்நிலையில் அரசியலில் புதிதாக அடியெடுத்து வைத்து முதல் தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் மும்முரமாக போட்டி போட்டு வருவதால் தற்போதே அனல் பறக்கிறது அரசியல் களத்தில். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்துள்ள திமுக எப்போதும் இல்லாத அளவுக்கு 26 கட்சிகளுடன் ‘மெகா’ கூட்டணியை அமைத்துள்ளது. மறுபுறம் இதைவிட குறைவு என்றாலும் கூட, அதிமுக – பாஜக…

Read More

பெண்மை என்பது வெறும் பாலினம் அல்ல; அது ஒரு மகா சக்தி. “அன்பின் இருப்பிடம்” என்றும் “சகிப்புத்தன்மையின் சிகரம்” என்றும் போற்றப்படும் பெண்கள், இன்று அடுப்பங்கரையைத் தாண்டி ஆகாயத்திற்கும் அப்பால் சாதனை படைத்து வருகின்றனர். தமிழக மண்ணில், தங்களின் தளராத உழைப்பால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சில சாதனையாளர்களைப் பற்றி பார்க்கலாம். வீரத்தின் அடையாளம் வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திர வரலாற்றில் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி வெற்றி கண்ட வீரமங்கை வேலுநாச்சியார். இழந்த தனது சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த முதல் இந்தியப் பெண் அரசி இவரே. 18-ம் நூற்றாண்டிலேயே இவர் காட்டிய வீரம், இன்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உத்வேகம் அளிக்கும் பாடமாகும். தியாகச் சுடர் குயிலி வேலுநாச்சியாரின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர். அவரின் படைத் தளபதியாகவும், மெய்க்காப்பாளராகவும் இருந்தவர் குயிலி. ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுக்க மறுத்து, வீரமரணம் அடைந்த உடையாள் என்ற பெண்ணின் நினைவாக, வேலுநாச்சியார்…

Read More

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. ஈரானை தொடர்ந்து கியூபா மீது கவனம் செலுத்தி வருகிறது இஸ்ரேல். ஈரான் சரணடைவதை தவிர வேறு வழியில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  இருப்பினும் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரம் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் அதிகமான போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பி, புதிய வகையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஈரானின் உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த விமானங்கள், அலை, அலையாக தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்பஹான் நகரில் உள்ள உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்பஹான் நகரில் உள்ள 80…

Read More

இந்தியாவின் அழைப்பு ஏற்று ஈரானின் மற்றொரு போர்க்கப்பல் இந்தியா வந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அழைப்பு ஏற்று விசாகப்பட்டினத்தில் நடந்த மிலன் 2026 சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ஈரான் போர் கப்பல் ஐரிஸ் டெனா வந்திருந்தது. பயிற்சி முடிந்து மார்ச் 4-ம் தேதி இலங்கை அருகே சென்று கொண்டிருந்த போது இந்திய பெருங்கடலில் அமெரிக்காவை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தாக்கி ஐரிஸ் டெனாவை மூழ்கடித்தது. இந்த தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர்.  இந்தியாவின் விருந்தினராக சென்ற எங்கள் கப்பலை முன்னறிவிப்பின்றி தாக்கிய அமெரிக்கா விரைவில் வருத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே மற்றொரு ஈரான் போர்க்கப்பல் இந்தியா வந்துள்ளது.  ஐரிஸ் லாவண் என்ற பெயர்க் கொண்ட அக்கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கேற்பதற்காக வந்துவிட்டு ஈரான் திரும்பும் போது கப்பலில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை…

Read More