Author: Editor TN Talks

 ஒடி​சா​வின் சம்​பல்​பூர் மாவட்​டத்​தில் ஊர்க்​காவல் படை​யில் 187 காலிப் பணி​யிடங்​கள் ஏற்​பட்​டன. இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்​பல்​பூரில் நடை​பெற்​றது. இதில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். அவர்​கள் அனை​வரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடு​தளத்​தில் வரிசை​யாக அமர வைக்​கப்​பட்​டிருந்​தனர். தரை​யில் அமர்ந்​த​படியே அனை​வரும் தேர்வை எழுதி முடித்​தனர். தேர்​வர்​கள் வெட்ட வெளி​யில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்​டுமே தகு​தி​யாகக் கொண்ட இந்​தப் பணிக்கு தினசரி படி​யாக ரூ.639 வழங்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில் இந்த தேர்​வில் எம்​பிஏ, எம்​சிஏ என முது​நிலை பட்​டம் பெற்​றவர்​களும் பங்​கேற்​றனர். இது வேலை​யின்​மை​யின் தீவிரத்தை காட்​டு​வ​தாக பலர் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்.

Read More

ஃபிபா தரவரிசை​யில் 2025-ம் ஆண்டை ஸ்பெ​யின் அணி முதலிடத்​துடன் நிறைவு செய்​துள்​ளது. 2025-ம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்​பந்து அணி​களின் தரவரிசை பட்​டியலை ஃபிபா வெளி​யிட்​டுள்​ளது. முதல் 10 இடங்​களில் எந்​த​வித மாற்​றம் இல்​லை. ஸ்பெ​யின் அணி 1877.18 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது. அர்​ஜெண்​டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்​கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்​சுகல் (1760.38), நெதர்​லாந்து (1756.27), பெல்​ஜி​யம் (1730.71), ஜெர்​மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணி​கள் முறையே 2 முதல் 10-வது இடங்​களில் உள்​ளன. இந்​தியா 1079.52 புள்​ளி​களு​டன் 142-வது இடத்​தில் உள்​ளது. அடுத்த தரவரிசை பட்​டியலில் வரும் ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்​படும் எனவும் ஃபிபா தெரி​வித்​துள்​ளது.

Read More

ரஷ்யாவின் தாக்​குதலில் உக்​ரைனின் தகவல் தொடர்பு கட்​டமைப்​பு​கள் சேதம் அடைந்து விட்​டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்​பு​களுக்கு உக்​ரைன் ராணுவம் தொழில​திபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்​லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்​படுத்​துகிறது. இதனால் உக்​ரைன் ராணுவத்​துக்கு வர்த்தக ரீதி​யில் தகவல் தொடர்பு சேவை​கள் வழங்​கும் செயற்​கைகோள்​களை தாக்​கு​வோம் என ரஷ்ய அதி​காரி​கள் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தனர். கீழடுக்கு சுற்​று​ வட்​ட​ப் பாதை​யில் உள்ள செயற்​கைக்கோள்​கள் மீது தாக்​குல் நடத்த எஸ்​-500 ஏவு​கணை​கள் தயார் நிலை​யில் உள்​ள​தாக ரஷ்யா சமீபத்​தில் கூறியது. விண்​ணில் செயல் இழந்த செயற்​கைக்கோள் மீது ஏவு​கணையை வீசி தகர்க்​கும் சோதனையை கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்யா செய்​தது. இந்​நிலை​யில் ஸ்டார் ​லிங்க் செயற்​கைக்​ கோள்​கள் மீது தாக்​குதல் நடத்த வெடிகுண்டு தயாரிப்​பில் பயன்​படுத்​தப்படும் கூரான இரும்பு துண்​டு​களை ஆயுத​மாக பயன்​படுத்த ரஷ்யா திட்​ட​மிட்​டுள்​ள​தாக நேட்டோ உளவுப் பிரி​வினர் சந்​தேகிக்​கின்​றனர். இந்த இரும்பு துண்​டு​களை சிறிய செயற்கைக் கோளில்…

Read More

எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை வினோத்​கு​மார் என அறி​முகம் செய்து கொண்​டு, `முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும்’ எனக்​கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். இதையடுத்து, ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் வீட்​டுக்​குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடை​பெற்றது. சந்​தேகப்​படும்​படி​யான எந்த ஒரு பொருளும் கிடைக்​காத​தால் புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் மிரட்​டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்​டனர். அப்​போது எதிர்​முனை​யில் பேசிய நபர், “என் பெயர் வினோத்​கு​மார். நான் தாம்​பரம் சேலை​யூர் கேம்ப் ரோட்​டில் உள்ள டாஸ்​மாக் கடை முன்பு நின்று கொண்​டிருக்​கிறேன். அடை​யாளம் தெரி​யாத இரு​வர் என்னை பலமாக தாக்​கினர். இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தும் போலீ​ஸார் வரவில்​லை.…

Read More

கிறிஸ்துமஸையொட்டி, சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 255 பேருந்துகளும், நாளை 525 பேருந்துகளும் இயக்கப்படவிருக்கின்றன. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மொத்தம் 91 சிறப்புப் பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து…

Read More

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் பரவலாக நாளை முதல் 28-ம் தேதி வரை மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வுகிறது. இதன் காரண​மாக 24, 25-ம் தேதி​களில் கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். 26, 27-ம் தேதி​களில் டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களி​லும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்​டங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர பகு​தி​களில் இன்று முதல் வறண்ட வானிலை நில​வும். அதி​காலை​யில் பனிமூட்டம் காணப்​படும். தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்​த​பட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 3 டிகிரி செல்​சி​யஸ் வரை குறையக்​ கூடும். நீல​கிரி…

Read More

புயல், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? திமுகவின் வாக்குத் திருட்டுக்கு அப்பாவி உழவர்களுக்கு துரோகம் செய்வதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: காவிரி பாசன மாவட்டங்களில் டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களை  கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அரசின் பல்வேறு ஆதாரங்களில் இருந்த நிதி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக செலவிடப்பட்டதால் தான் உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கது. காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும்…

Read More

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் முதல் மாநாடு நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி, டிசம்பரில் டெல்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாடுகள் நடைபெற்றன. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் 4-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 5-வது தலைமைச் செயலாளர்கள் தேசிய மாநாடு வரும் 26-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். வரும் 28-ம் தேதி வரை 3 நாட்கள் மாநாடு நடைபெறும். இதில் தலைமைச் செயலாளர்கள் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்க உள்ளனர்.

Read More

​​காய்ச்​சல், சளி பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​றவை​யாக இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து வகை​யான மாத்​திரை, மருந்துகள் மத்​திய மற்​றும் மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன. ஆய்​வின்​போது, தரமற்ற மற்​றும் போலி மருந்துகள் கண்​டறியப்பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​துகளின் மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளி, கிரு​மித் தொற்​று, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 205 மருந்துகள் தரமற்​ற வை​யாக​வும், 2 மருந்துகள் போலி​யாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது. அதன் விவரங்​கள் மத்​திய மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் https://cdsco.gov.in/ இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

Read More

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அனைத்துப் பள்ளி தலைமையாசியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (டிச.23) முடிவடைகிறது. இதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு மற்றும் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது. அரையாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவடைவதை அடுத்து, நாளை டிசம்பர் 24 முதல் 2026 ஜனவரி 4 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. அதேபோல், அரையாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று…

Read More