Author: Editor TN Talks
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை கத்தியால் குத்த இளைஞர் ஒருவர் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் திடீரென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சனை செய்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு…
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட SIR படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின்…
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் மகன் ரெஹானின் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த வகுப்புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்கிறார் ரெஹான். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா – ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழி முஸ்லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் தொழிலதிபர், தாய் நந்திதா பெய்க் பிரபல டிசைனராக பணிபுரிகிறார். கால் பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்துள்ளார் அவிவா. ரெஹானும் புகைப்படக் கலைஞராக இருக்கிறார். இவர் தனது கலை இணையதளத்தில் வனவிலங்குகள், தெருக்களில் உள்ள காட்சிகள், வர்த்தகங்கள் போன்றவற்றை விளக்கும் புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். ‘படைப்பு சுதந்திரம்’ என்ற தலைப்பில் கடந்த 2021-ம் ஆண்டு…
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதே வீட்டு பணிப் பெண், பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடந்தார். இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்ற ரேவண்ணா, நீதிமன்ற கண்காணிப்பில் இருந்தார். இவ்வழக்கின் விசாரணை முழுவதும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.சிவகுமார் தீர்ப்பை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: ரேவண்ணா தன்னை 2020-ம் ஆண்டு…
இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கிரசியன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாகராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்து, காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, ஜன.13-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் 18 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியை அதிமுக முன்னாள் எம்பியும், பல்கலைக்கழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். பழவூர் அருகே யாக்கோபு புரத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை அதிமுக புறநகர் மாவட்ட கழக பொருளாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பல்கலைகழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்து போட்டியினை துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ஆனது நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி வரும் அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக பதிணைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஏழாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் மழைக்கு பிந்தைய குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகள் எண்ணிகையை கண்டறியும் முக்கிய பணியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் அந்தந்த வனச்சரகங்களில் பணியாற்றும் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் 2 வேட்டைத்தடுப்பு காவலர்கள் என 4 பேர் கொண்டு அமைக்கப்பட்டது. 10 வனச்சரகங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் பைன்டர், காம்பஸ் ஜி.பி.எஸ் கருவி போன்ற கருவிகள் கையாளப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகள்…
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களுக்கு செங்கோட்டையன் நேரடியாக ஃபோனில் தொடர்புகொண்டு பேசி வருகிறார். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், “அதிமுகவில் பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்ட மற்றும் அவரின் தலைமையை ஏற்க விரும்பாத முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள், மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உள்ளனர். இந்த அதிருப்தியாளர்களுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படாது. அவ்வாறு ஓரம் கட்டப்பட்ட முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி…
ரயில் ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால், 3 சதவீதம் கட்டணம் தள்ளுபடி என ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் ரயில்ஒன் செயலியில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை திட்டம் 14.01.2026 முதல் 14.07.2026 வரையிலான காலகட்டத்தில் நடைமுறையில் இருக்கும். அதேநேரம், ரயில்ஒன் செயலியில் ஆர்-வாலெட் மூலம் முன்பதிவு செய்வதற்கு தற்போது வழங்கப்படும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம் சீராக நடக்கத் தொடங்கும் . பூசம்: தவறாக நினைத்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து தேடி வருவார்கள். ஆயில்யம்: பிள்ளைகளின் கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மகம்: புதிய சொத்து வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள். பூரம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்திரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவான நிலை ஏற்படும். அஸ்தம்: வெளிநாடு செல்வதற்காக விசா அப்ளை பண்ணுவீர்கள். சித்திரை: வாக்குத் திறமையால் எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவீர்கள். சுவாதி: முடியாத காரியத்தை முடித்து முதலாளியின் அன்பைப் பெறுவீர்கள் விசாகம்: ஆன்லைன்…