Author: Editor TN Talks

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த விழாவில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை கத்தியால் குத்த இளைஞர் ஒருவர் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து  ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் திடீரென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சனை செய்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு…

Read More

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட SIR படிவங்களைப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின்…

Read More

காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா வதே​ரா​வின் மகன் ரெஹானின் திருமண நிச்​சய​தார்த்​தம் விரை​வில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஏழு ஆண்​டு​களாக காதலித்து வந்த வகுப்​புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்​கிறார் ரெஹான். முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா – ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார். கால் பந்​தாட்ட வீராங்​க​னை​யாக​வும் இருந்​துள்​ளார் அவி​வா. ரெஹானும் புகைப்​படக் கலைஞ​ராக இருக்​கிறார். இவர் தனது கலை இணை​யதளத்​தில் வனவிலங்​கு​கள், தெருக்​களில் உள்ள காட்​சிகள், வர்த்​தகங்​கள் போன்​றவற்றை விளக்​கும் புகைப்​படங்​கள் பதி​விட்​டுள்​ளார். ‘படைப்பு சுதந்​திரம்’ என்ற தலைப்​பில் கடந்த 2021-ம் ஆண்டு…

Read More

முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்டு உள்​ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்​கும் மேற்​பட்ட பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்​கொடுமை வழக்​கில் பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக, அதே வீட்டு பணிப் பெண், பிரஜ்வலின் தந்​தை​யும் முன்​னாள் அமைச்​சரு​மான ரேவண்ணா கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக வழக்கு தொடந்​தார். இந்த வழக்கு மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. அதில் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்ற ரேவண்​ணா, நீதி​மன்ற கண்​காணிப்​பில் இருந்​தார். இவ்​வழக்​கின் விசா​ரணை முழு​வதும் நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி கே.என்​.சிவகு​மார்  தீர்ப்பை வெளி​யிட்​டார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: ரேவண்ணா தன்னை 2020-ம் ஆண்டு…

Read More

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்​றனர். இந்நிலையில், நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் கிரசி​யன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாக​ராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்​து, காரைநகர் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர். பின்​னர் அவர்​களை இலங்கை மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, ஊர்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட மீனவர்களை, ஜன.13-ம் தேதி வரை யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். கடந்த ஒரு வாரத்​தில் 18 ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்​யப்பட்டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Read More

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியை அதிமுக முன்னாள் எம்பியும், பல்கலைக்கழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். பழவூர் அருகே யாக்கோபு புரத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை அதிமுக புறநகர் மாவட்ட கழக பொருளாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பல்கலைகழக கபடி விளையாட்டு வீரருமான சௌந்தரராஜன் வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்து போட்டியினை துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ஆனது நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி வரும் அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக பதிணைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஏழாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

Read More

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் மழைக்கு பிந்தைய குளிர்கால புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகள் எண்ணிகையை கண்டறியும் முக்கிய பணியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடமபூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரங்களில் குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் அந்தந்த வனச்சரகங்களில் பணியாற்றும் வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் 2 வேட்டைத்தடுப்பு காவலர்கள் என 4 பேர் கொண்டு அமைக்கப்பட்டது. 10 வனச்சரகங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் பைன்டர், காம்பஸ் ஜி.பி.எஸ் கருவி போன்ற கருவிகள் கையாளப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகள்…

Read More

அ​தி​முக​வில் இருந்து தவெக​வுக்கு சென்ற முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் கட்​சி​யின் நிர்​வாக குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் மற்​றும் ஈரோடு, கோவை, நீல​கிரி, திருப்​பூர் ஆகிய 4 மாவட்​டங்​களின் அமைப்பு செய​லா​ளர் பொறுப்பு வகித்து வரு​கி​றார். அவர் அதி​முக​வில் அதிருப்​தி​யில் உள்ள முன்​னாள் எம்​எல்​ஏக்​களை இழுக்​கும் முயற்​சி​யில் தீவிர​மாக களம் இறங்​கி​யுள்​ளார். குறிப்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் கோட்​டை​யாக கருதப்​படும் சேலம், நாமக்​கல், ஈரோடு, கோவை போன்ற மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய கொங்கு மண்​டலத்​தைச் சேர்ந்த அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏக்​களுக்கு செங்​கோட்​டையன் நேரடி​யாக ஃபோனில் தொடர்​பு​கொண்டு பேசி வரு​கி​றார். இதுகுறித்து அதி​முக முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் கூறுகை​யில், “அதி​முக​வில் பழனி​சாமி​யால் ஓரங்​கட்​டப்​பட்ட மற்​றும் அவரின் தலை​மையை ஏற்க விரும்​பாத முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள், மாவட்ட, நகர நிர்​வாகி​கள் பலர் உள்​ளனர். இந்த அதிருப்​தி​யாளர்​களுக்கு வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட நிச்​ச​யம் வாய்ப்பு வழங்​கப்​ப​டாது. அவ்​வாறு ஓரம் கட்​டப்​பட்ட முன்​னாள், இந்​நாள் எம்​எல்​ஏக்​கள் மற்​றும் கட்சி…

Read More

ரயில் ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால், 3 சதவீதம் கட்டணம் தள்ளுபடி என ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: டிஜிட்​டல் முன்​ப​திவை ஊக்​குவிக்​கும் வகை​யில் ரயில்​ஒன் செயலி​யில் அனைத்து டிஜிட்​டல் கட்டண முறை​கள் மூல​மாக​வும் முன்​ப​திவு செய்​யப்​ப​டாத டிக்​கெட்​டு​களை எடுக்​கும்​போது 3 சதவீதம் தள்​ளு​படி வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சலுகை திட்​டம் 14.01.2026 முதல் 14.07.2026 வரையி​லான கால​கட்​டத்​தில் நடை​முறை​யில் இருக்​கும். அதே​நேரம், ரயில்​ஒன் செயலி​யில் ஆர்​-​வாலெட் மூலம் முன்​ப​திவு செய்​வதற்கு தற்​போது வழங்​கப்​படும் 3 சதவீத கேஷ்பேக் சலுகை​யும் தொடர்ந்து அமலில் இருக்​கும். இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்​.

Read More

அஸ்வினி: வேலையிடத்து பிரச்சனையை வீட்டிற்குக் கொண்டுவர வேண்டாம் . பரணி: பழைய வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் வார்த்தையில் மயங்கி உதவிகள் தேடி வரும். ரோகிணி: மனைவியின் பேச்சில் கிறங்கிக் கிடப்பீர்கள். மிருகசீரிடம்: சலிப்பில்லாத உழைப்பால் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். திருவாதிரை: எந்தக் காரியத்திலும் நிதானம் தவறி நடக்காதீர்கள். புனர்பூசம்: சிக்கலாக இருந்த வியாபாரம் சீராக நடக்கத் தொடங்கும் . பூசம்: தவறாக நினைத்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து தேடி வருவார்கள். ஆயில்யம்: பிள்ளைகளின் கடமையை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மகம்: புதிய சொத்து வாங்குவதற்காக அட்வான்ஸ் கொடுப்பீர்கள். பூரம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்திரம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவான நிலை ஏற்படும். அஸ்தம்: வெளிநாடு செல்வதற்காக விசா அப்ளை பண்ணுவீர்கள். சித்திரை: வாக்குத் திறமையால் எதிரிகளையும் நண்பர்கள் ஆக்குவீர்கள். சுவாதி: முடியாத காரியத்தை முடித்து முதலாளியின் அன்பைப் பெறுவீர்கள் விசாகம்: ஆன்லைன்…

Read More