Author: Editor TN Talks
‘திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுகிறது’ என்ற செய்திகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தொகுதி பங்கீட்டில் நிலவும் வாய்க்கால் பிரச்சனைகள் தான். அப்படிப்பட்ட தொகுதி பங்கீடு விவகாரத்தில் தற்போது திமுக ஒரு முடிவு செய்திருப்பதாகவும், விசிகவை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய நகர்வை திமுக மேற்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தேர்தல் பணிகளோடு சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கசிந்த தகவலின் படி, “கூட்டணி கட்சிகள் கடந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனரோ, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இம்முறை சீட் ஒதுக்குவோம்” என சில முக்கிய நிர்வாகிகள் கறாராக சொல்லியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில், “திமுகவுக்கு 170 சீட்டுகள்; தோழமைகளுக்கு 64” என…
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான ராயபுரம் மாடல் லைன் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு தேவை இல்லை என்பதால் அவர்கள் பட்டா கேட்டு பலமுறை மனு செய்தனர். தமிழக அரசு தற்போது அரசுக்கு தேவையில்லாத இடங்களை குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைப்படி ராயபுரம் மாடல் லைன் பகுதியில் 400 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தது. இதற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆர்.டி. சேகர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது 70 ஆண்டுகளாக இந்த இடத்தில் உள்ள மக்கள் பட்டா பெற முயற்சி செய்தனர் அரசுக்கு தேவை இல்லாத இடம் என்பதால் அரசு ஆணை எண் 97 இன் படி 400 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது.…
பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியு்றுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தோ, அதில் பொங்கல் கரும்பு இடம் பெறுமா? என்பது குறித்தோ தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் என்பதை நம்பி பன்னீர் கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்கள் கவலை அடைந்துள்ளனர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பொங்கல் திருநாள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொன்மொழி ஆகும். ஆனால், அரசை நம்பி பொங்கல் கரும்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு, ஆட்சியாளர்களால் இழைக்கப்படும் துரோகத்தால், தை பிறந்தால் வலி தான் பிறக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யப்படும் குளறுபடிகளால் ஆண்டுக்கு ஆண்டு…
2026ம்ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சரித்திர வெற்றி ஆண்டாக அமையும் என்றும், தமிழகத்தில் தர்மம் நிலைநாட்டப்படும் என்று ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சோதனைகளைக் கடந்த வெற்றிப் பயணம்: 2025ம்ஆண்டு நமக்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. நாம் பெரிதும் நம்பியவர்களின் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் எதிர்கொண்டோம். ஆனால், என் தாயார் அடிக்கடி சொல்வது போல, “நடந்தவை யாவும் நன்மைக்கே” என எடுத்துக்கொண்டு நாம் முன்னேறுகிறோம். துரோகங்கள் நம்மை உடைக்கவில்லை, மாறாக நம்மை இன்னும் கூர்மையாக்கி அசைக்க முடியாத சக்தியாக மாற்றியிருக்கிறது. தர்மத்தின் வெற்றி: “தர்மம் தாமதிக்கலாம், ஆனால் தவறாமல் ஜெயிக்கவும் செய்யும்” என்ற வாக்கிற்கு இணங்க, வஞ்சகத்தின் மேகங்கள் விலகி, நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். 2026-ம் ஆண்டு, துரோகத்திற்கு எதிரான உண்மையின் வெற்றியாகவும், அச்சுறுத்தலுக்கு எதிரான நம்பிக்கையின் வெற்றியாகவும் அமையும். இலக்கு 26: நேற்றிரவு எனது தாயார் என்னிடம் ஒரு தீர்க்கமான நம்பிக்கையை பகிர்ந்துகொண்டார். “2026 சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்” என்பதே அந்த நம்பிக்கை. இந்த இயக்கம் பதவி ஆசைக் கொண்டவர்களால் கட்டப்பட்டது அல்ல; இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த உண்மையான தொண்டர்களாலும், மக்களாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும், விசுவாசமுமே எங்களின் மிகப்பெரிய பலம். புத்தாண்டு வாழ்த்துகள்: இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும். மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலோடும், சேவை மனப்பான்மையோடும் 2026-ஐ பா.ம.க-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஸ்ரீகாந்தி கூறியுள்ளார்.
பாக்சிங் டே டெஸ்ட் என்று பிரபலமாக அழைக்கப்படும் மெல்போர்ன் டெஸ்ட் அதிர்ச்சிகரமாக 2 நாட்களில் முடிவடைந்ததையடுத்து அத்தகைய வேகம், எழுச்சி, ஸ்விங் பந்துகளுக்கு சாதக ஆடுகளங்களில் செடேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே போல் ஆட வேண்டுமென்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மெல்போர்ன் பிட்ச் பிரச்சினை என்றால் பேட்டர்களின் ரியாக்ஷன் ஒரு அதிர்ச்சி என்று இயன் சாப்பல் பத்தி ஒன்றில் குறிப்பிட்டதையடுத்து இப்போது ராபின் உத்தப்பாவும் மெல்போர்ன் பிட்ச் ‘பேட் செய்யவே முடியாத’ பிட்ச் அல்ல என்று கூறியுள்ளார். பேட்டர்கள் சரியான அணுகுமுறையைக் கடைபிடித்திருந்தால் நிச்சயம் ரன்கள் ஸ்கோர் செய்திருக்க முடியும் என்கிறார் உத்தப்பா. அவர் யூடியூப் சேனலில் கூறும்போது, “இரு வேறுபட்ட சூழ்நிலையாகும் இது. பேட்டிங்கே சாத்தியமில்லை என்பது போன்ற பிட்ச் அல்ல மெல்போர்ன் பிட்ச். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளங்கள் உள்ளன, இன்று கிரிக்கெட் விளையாடும் விதம்தான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். இத்தகைய…
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையம் எல்லாம் மாநிலங்களிலும், அந்தந்த மொழிகளில், விவரங்களை வெளியிடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆங்கிலத்தில் அறிவிப்பை வெளியிடுகிறது. இது தமிழகம் மீதான மறைமுக தாக்குதல் ஆகும். தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் தமிழகத்தை தாக்குகிறது. தேர்தல் ஆணையம் தமிழ் படிவங்களை தருவதில்லை. எழுத்துப்பூர்வமாக இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்க உள்ளனர். எங்கள் கட்சியில் எந்த பிரச்னை என்றாலும், அதை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழக அரசுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் யாராவது பேசினால், அவர்கள் மீது கட்சி தலைமையிடம் புகாரை தெரிவித்து விட்டோம். அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என முழுமையாக…
தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது , கட்சியின் உள்ளரங்க கூட்டம் என்பதால் உள்ளரங்கில் விவாதிக்கப்பட்டது குறித்து பொதுவெளியில் பேச முடியாது .. திமுக என்கிற தமிழ்நாட்டை சீரழிக்கின்ற அராஜக ஆட்சியை மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட ஓரளவுக்காவது கேட்கும் , ஆனால் திமுக அரசுக்கு கேட்கவில்லை , செவிலியர்கள் ஆசிரியர்கள் அரசுத்துறை பணியாளர்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு இந்த அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது , செவிலியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை கள்ளச்சாராயம்…
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக சீனா கூறி உள்ள நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இந்தியா அந்த நாட்டுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியா கொடுத்த பதிலடியில் அந்த நாட்டின் விமானப் படைத் தளம் கடுமையாக சேதமடைந்தது. இந்தியாவின் பதிலடி தீவிரமாக இருந்ததை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ), இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு போரை முடிவுக்குக்…
இ-சேவை, ஆதார் மையங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி பொது மேலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இசேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் இன்றும், நாளையும் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளது. ஆதலால் இன்றும் ( 31.12.2025), நாளையும் (01.01.2026) இ-சேவை மையங்கள், ஆதார் சேவை மையங்கள் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் அரசு கேபிள் டிவி பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்துவதற்கு ஆணையிட்டிருக்கும் திமுக அரசு, அதற்காக ரூ.43.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு நடத்தவிருக்கும் நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேவுக்கும், சாதிவாரி சர்வேவுக்கு இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். சாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில்…