Author: Editor TN Talks

கடந்த சில தினங்களாக அதிமுகவில் சில முக்கிய நகர்வுகள் பெரிதாக பேசப்படாமல் நடந்துள்ளன. அதில் ஒன்று விஜய்யை மையப்படுத்தி கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்த சிக்னல்; மற்றொன்று SIR விவகாரத்தில் தாமதமாக சுதாரித்து விழித்திருப்பது. இந்த இரண்டு விவகாரங்கள் பற்றி எம்.ஜி.ஆர் மாளிகையிலிருந்து பரவி காற்றோடு கலந்த செய்திகளை செவிகளில் சேகரித்து கட்டுரையாக தொகுத்திருப்பதே இத்தொகுப்பு. ATTACK MODE ON:- கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே விஜய்யை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எந்தெந்த வழிகளிலோ முயன்று பார்த்தார். அந்த முயற்சிகளை எல்லாம் நம்பியே கட்சியினரிடம், “கொஞ்சம் பொறுங்கள் ஒரு பெரிய கட்சி, பிரம்மாண்டமான கட்சி கூட்டணிக்கு வரவுள்ளது” என நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தார். அது விஜய் தான் என அரசியல் வட்டாரமே கிசுகிசுக்க, ‘அப்படியெல்லாம் இல்லை’ நழுவி சென்றார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், அது விஜய் தான் என சொல்லும்படியாக, தன்னுடைய பிரச்சார கூட்டத்திலேயே, ‘தவெக கொடியை’…

Read More

டி20 அனுபவ வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பைக்கு ஜேசன் ஸ்மித் என்பவரைத் தேர்வு செய்தது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவர் 5 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பதே. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தன் கடைசி 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் 40 ரன்களை எட்டவில்லை என்பதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று தென் ஆப்பிரிக்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 31 வயதான ஜேசன் ஸ்மித் ஒரு ஆல்ரவுண்டர். கொஞ்சம் சீம் பவுலிங் செய்யக் கூடியவர், அதாவது தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய யுடிலிட்டி கிரிக்கெட்டர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை வெஸ்டர்ன் கேப் பகுதியில் ஆடி வந்தவர் ஜேசன் ஸ்மித் தற்போது டர்பனில் ஆடுகிறார். அவரைத் தேர்வு செய்யக் காரணம் அவரது பன்முகத் திறன் என்கின்றனர் தென் ஆப்பிரிக்கா தேர்வாளர்கள். ஸ்மித்தே தன்னைப் பற்றிக் கூறும்போது, “நான் மூன்றாம் வரிசையிலிருந்து ஏழாம் வரிசை வரை…

Read More

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியின் மார்ட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்காய்ச்சல் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு, டேமியன் மார்ட்டின் பிரிஸ்பேனிலுள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கோமா நிலையிலிருந்து தேறி மீண்டு வந்துள்ளார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

‘தெய்​வத்​திரு​மகள்​’,‘சைவம்’ படங்​களில் குழந்தை நட்​சத்​திர​மாக நடித்த சாரா அர்​ஜுன், மணிரத்​னத்​தின் ‘பொன்​னி​யின் செல்​வன்’ படத்​தில் இளவயது ஐஸ்​வர்யா ராயாக நடித்​துப் புகழ்​பெற்​றார். இவர் ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யாகி சூப்​பர் ஹிட்​டாக ஓடிக் கொண்​டிருக்​கும் ‘துரந்​தர்’ படத்​தில் கதா​நாயகி​யாக நடித்​துள்​ளார். ஆதித்யா தார் இயக்​கி​யுள்ள இப்​படம், கதா​நாயகி​யாக சாரா அர்​ஜுனுக்கு முதல் படம். மூன்​றரை மணி நேரம் ஓடும் ‘துரந்​தர்​’படத்​தில் மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இது​வரை ரு.1,200 கோடிக்கு மேல் வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் வெற்​றிக்​காக சாரா அர்​ஜுன் பார்​வை​யாளர்​களுக்கு நன்றி தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நீண்ட நேரம் சொல்​லும் கதைகளைப் பார்க்​கும் பொறுமை, பார்​வை​யாளர்​களுக்கு இல்லை என்று கூறப்​படு​வது தவறு என்​பதை இப்​படம் நிரூபித்​துள்​ளது. ‘துரந்​தர்’ வெற்றி முற்​றி​லும் பார்​வை​யாளர்​களால்​தான். அதற்​காக நன்​றி. நாயகி​யாக என்வாழ்க்​கையை இப்​போது​தான் தொடங்​கு​கிறேன். இவ்​வளவு விரை​வில் ஊக்​கம் பெறு​வது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்.…

Read More

பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின்  நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடியுடன் தோன்றினார். அவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் ‘மூன்வாக்’ படக்குழுவினருடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை மேடையிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read More

சு​திப்டோ சென் இயக்​கத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளி​யான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளா​வில் இளம்​பெண்​களை மதமாற்​றம் செய்து அவர்களைத் தீவிர​வா​தி​களின் பாலியல் அடிமை​களாகப் பயன்​படுத்​து​வ​தாக அந்​தப் படத்​தில் காட்​சிகள் இடம்​பெற்​றன. அந்​தப் படத்​துக்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் தடை செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் அந்​தப் படத்​தின் அடுத்த பாக​மாக ‘பி​யாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உரு​வாகி வரு​கிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்​தைத் தயாரித்த விபுல் அம்​ருத்​லால் ஷா தயாரிக்கிறார். இப்​படக்​குழு வீடியோஒன்றை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “அது வெறும் கதை​தான்என்று சொன்​னார்​கள். அதை நம்​பகத்​தன்​மையற்​ற​தாக மாற்ற முயன்​றார்​கள். ஆனால் உண்​மையை நிறுத்த முடி​யாது. ஏனென்​றால் சில கதைகள் ஒரு​போதும் முடிவடைவ​தில்​லை. இந்த முறை, இக்​கதை உங்​களை இன்​னும் அதி​க​மாகக் காயப்​படுத்​தும்’’ என்று கூறி​யுள்​ளனர். இப்​படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்​கு​கிறார். நடிகர், நடிகைகள் மற்​றும் தொழில்​நுட்ப கலைஞர்​கள் பற்​றிய விவரத்தை படக்​குழு வெளி​யிட​வில்​லை. பிப்​.27-ம்தேதி இப்​படம்…

Read More

 தின​மும் பழைய சோறு சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம். குறை பிரசவத்தை தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில், இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை சார்​பில் பழைய சோறு குறித்த அறி​வியல் கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. தொடர்ந்​து, கலாநிதி வீரா​சாமி எம்​.பி.​யின் தொகுதி மேம்​பாட்டு நிதி​யில் பல் மருத்​துவ பிரி​வில், புதிய மருத்​துவ உபகரணங்​கள் மற்​றும் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்​றதை மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்டு வந்​தார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: இரைப்பை குடல் மற்​றும் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்​றும் வாழ்​வூட்​டும் மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்​சித் துறை​யில் கடந்த 5 ஆண்​டு​களாக மருத்​து​வர் ஜெஷ்வந்த் தீவிர முயற்​சி​யின் காரண​மாக பழைய சோறு பற்றி பல்​வேறு ஆராய்ச்​சிகளை மேற்​கொண்​டுள்​ளார். பழைய சோறில் பல்​வேறு சத்​துக்​களும் நல்ல பாக்​டீரி​யாக்​களும்…

Read More

அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது என தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று பாஜக கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பங்கேற்கவில்லை. பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் கூட்டத்தில் பேசும் போது, அதிமுக வெற்றி…

Read More

தமிழில், லிங்​கு​சாமி இயக்​கிய ‘த வாரியர்’, வெங்​கட்​ பிரபு​வின் ‘கஸ்​டடி’ ஆகிய படங்​களில் நடித்​துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்​தி​யின் ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​யின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ ஆகிய படங்​களில் நடித்துள்ளார். இவர் ‘சூப்​பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்​ததன் மூலம் சினி​மா​வில் அறி​முக​மானவர். இப்​போது மீண்டும் இந்​திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்​கத்​தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்​ப​தாகவும் கூறப்​பட்​டது. இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் மும்​பை​யில் பிறந்து வளர்ந்தவள் என்​ப​தால், இந்​தி​யில் நடிப்​பது எனக்கு சிறப்​பாக இருக்​கும் என்று உணர்ந்​தேன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் போல நான் கற்​றுக்கொண்டு நடிக்க வேண்​டிய​தில்​லை. இந்தி தெரி​யும் என்​ப​தால் வசனங்​களின் அர்த்​தம் புரி​யும். இந்​தி​யில் எனக்கு சில வாய்ப்​பு​கள் வந்​தன. கால்​ஷீட் பிரச்​சினை காரண​மாக ஒப்​பந்​த​மாக​வில்​லை. இந்​தித் திரை​யுல​கில் பணிபுரி​யும் முறை வித்​தி​யாச​மானது.…

Read More

சு​தா கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘பராசக்​தி’. ரவி மோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படம் பொங்​கலை முன்​னிட்டு ஜன.10-ல் வெளி​யாகிது. இதன் பாடல் வெளி​யீட்டு விழா தனி​யார் கல்​லூரி ஒன்​றில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்துகொண்​டனர். விழா​வில் சிவ​கார்த்​தி​கேயன் பேசும்​போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்​களை அழைத்​துச் செல்​லும் படம் இது. மாணவர்​கள் எப்​போதுமே சக்​தி​ வாய்ந்​தவர்​கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்​ட​வர்​களாக இருந்தார்கள் என்​பதை இந்​தப் படம் அழுத்​த​மாக காட்​டு​கிறது. படத்​தின் உள்​ளடக்​கம் குறித்து பல கருத்​துகள் வெளிவரு​கின்​றன. ஆனால் பலரின் தியாகங்​களை நாம் நேர்​மறை​யாக​வும் மரியாதை​யுட​னும் பதிவு செய்​திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார்,…

Read More