Author: Editor TN Talks
கடந்த சில தினங்களாக அதிமுகவில் சில முக்கிய நகர்வுகள் பெரிதாக பேசப்படாமல் நடந்துள்ளன. அதில் ஒன்று விஜய்யை மையப்படுத்தி கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்த சிக்னல்; மற்றொன்று SIR விவகாரத்தில் தாமதமாக சுதாரித்து விழித்திருப்பது. இந்த இரண்டு விவகாரங்கள் பற்றி எம்.ஜி.ஆர் மாளிகையிலிருந்து பரவி காற்றோடு கலந்த செய்திகளை செவிகளில் சேகரித்து கட்டுரையாக தொகுத்திருப்பதே இத்தொகுப்பு. ATTACK MODE ON:- கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே விஜய்யை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எந்தெந்த வழிகளிலோ முயன்று பார்த்தார். அந்த முயற்சிகளை எல்லாம் நம்பியே கட்சியினரிடம், “கொஞ்சம் பொறுங்கள் ஒரு பெரிய கட்சி, பிரம்மாண்டமான கட்சி கூட்டணிக்கு வரவுள்ளது” என நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தார். அது விஜய் தான் என அரசியல் வட்டாரமே கிசுகிசுக்க, ‘அப்படியெல்லாம் இல்லை’ நழுவி சென்றார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், அது விஜய் தான் என சொல்லும்படியாக, தன்னுடைய பிரச்சார கூட்டத்திலேயே, ‘தவெக கொடியை’…
டி20 அனுபவ வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸிற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பைக்கு ஜேசன் ஸ்மித் என்பவரைத் தேர்வு செய்தது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவர் 5 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பதே. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தன் கடைசி 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் 40 ரன்களை எட்டவில்லை என்பதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று தென் ஆப்பிரிக்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 31 வயதான ஜேசன் ஸ்மித் ஒரு ஆல்ரவுண்டர். கொஞ்சம் சீம் பவுலிங் செய்யக் கூடியவர், அதாவது தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய யுடிலிட்டி கிரிக்கெட்டர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை வெஸ்டர்ன் கேப் பகுதியில் ஆடி வந்தவர் ஜேசன் ஸ்மித் தற்போது டர்பனில் ஆடுகிறார். அவரைத் தேர்வு செய்யக் காரணம் அவரது பன்முகத் திறன் என்கின்றனர் தென் ஆப்பிரிக்கா தேர்வாளர்கள். ஸ்மித்தே தன்னைப் பற்றிக் கூறும்போது, “நான் மூன்றாம் வரிசையிலிருந்து ஏழாம் வரிசை வரை…
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியின் மார்ட்டின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கோல்ட் கோஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்காய்ச்சல் காரணமாக 10 நாட்களுக்கு முன்பு, டேமியன் மார்ட்டின் பிரிஸ்பேனிலுள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கோமா நிலையிலிருந்து தேறி மீண்டு வந்துள்ளார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தெய்வத்திருமகள்’,‘சைவம்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராயாக நடித்துப் புகழ்பெற்றார். இவர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படம், கதாநாயகியாக சாரா அர்ஜுனுக்கு முதல் படம். மூன்றரை மணி நேரம் ஓடும் ‘துரந்தர்’படத்தில் மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவரை ரு.1,200 கோடிக்கு மேல் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்காக சாரா அர்ஜுன் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீண்ட நேரம் சொல்லும் கதைகளைப் பார்க்கும் பொறுமை, பார்வையாளர்களுக்கு இல்லை என்று கூறப்படுவது தவறு என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. ‘துரந்தர்’ வெற்றி முற்றிலும் பார்வையாளர்களால்தான். அதற்காக நன்றி. நாயகியாக என்வாழ்க்கையை இப்போதுதான் தொடங்குகிறேன். இவ்வளவு விரைவில் ஊக்கம் பெறுவது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்.…
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடியுடன் தோன்றினார். அவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் ‘மூன்வாக்’ படக்குழுவினருடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை மேடையிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. அந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தின் அடுத்த பாகமாக ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உருவாகி வருகிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்தைத் தயாரித்த விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கிறார். இப்படக்குழு வீடியோஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அது வெறும் கதைதான்என்று சொன்னார்கள். அதை நம்பகத்தன்மையற்றதாக மாற்ற முயன்றார்கள். ஆனால் உண்மையை நிறுத்த முடியாது. ஏனென்றால் சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை. இந்த முறை, இக்கதை உங்களை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தும்’’ என்று கூறியுள்ளனர். இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிடவில்லை. பிப்.27-ம்தேதி இப்படம்…
தினமும் பழைய சோறு சாப்பிட்டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். குறை பிரசவத்தை தவிர்க்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் பழைய சோறு குறித்த அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து, கலாநிதி வீராசாமி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல் மருத்துவ பிரிவில், புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் பேசியதாவது: இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர் ஜெஷ்வந்த் தீவிர முயற்சியின் காரணமாக பழைய சோறு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பழைய சோறில் பல்வேறு சத்துக்களும் நல்ல பாக்டீரியாக்களும்…
அமித்ஷா ஊழலைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக ஒருங்கிணைந்து, கொள்கை சார்ந்து கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. நேற்று பாஜக கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசியிருக்கிறார். அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் பங்கேற்கவில்லை. பாஜகவோடு நிர்ப்பந்தத்தின் பேரில் கூட்டணி அமைத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் கூட்டத்தில் பேசும் போது, அதிமுக வெற்றி…
தமிழில், லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’, வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, அடுத்து கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜெயம் ரவியின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி அவர் கூறும்போது, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போல நான் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டியதில்லை. இந்தி தெரியும் என்பதால் வசனங்களின் அர்த்தம் புரியும். இந்தியில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஒப்பந்தமாகவில்லை. இந்தித் திரையுலகில் பணிபுரியும் முறை வித்தியாசமானது.…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் வெளியாகிது. இதன் பாடல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது. படத்தின் உள்ளடக்கம் குறித்து பல கருத்துகள் வெளிவருகின்றன. ஆனால் பலரின் தியாகங்களை நாம் நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கி றோம். இதில் ரவிமோகன் சார்,…