Author: Editor TN Talks

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி உள்பட பலர் நடித்து 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் 50-வது படமான இதில் அவர் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ளவுட் நைன் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஜன. 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Read More

தமிழில், தில், கில்லி உள்பட பல்​வேறு படங்​களில் வில்​லன், குணசித்​திர வேடங்​களில் நடித்​திருப்​பவர் ஆஷிஷ் வித்​யார்த்​தி. இந்​தி, தெலுங்கு உள்பட பல்​வேறு மொழிகளில் நடித்து வரு​கிறார். இவர், தன்​னம்​பிக்கை பேச்​சாள​ராக​வும் இருக்​கிறார். இவரும் இவர் மனைவி ரூபாலி பரு​வா​வும் குவாஹாட்டியில் சாலையை கடக்​கும்​போது, வேக​மாக வந்த இருசக்கர வாக​னம் மோதி காயமடைந்​தனர். உடனடி​யாக மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. இதுபற்றி வீடியோ ஒன்​றில் தெரி​வித்​துள்ள ஆஷிஷ் வித்​யார்த்​தி, “விபத்து நடந்​தது உண்​மை ​தான். எனக்கு பெரிய காயம் ஏது​மில்​லை. நான் நலமாக இருக்​கிறேன். என் மனை​விக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. உங்​களுக்​குத் தெரியப்​படுத்​தவே இதைச் சொல்​கிறேன். இதை பரபரப்​பாக்க வேண்​டிய​தில்​லை. விபத்தை ஏற்​படுத்​திய பைக் ஓட்​டிய​வர் குறித்​தும் விசா​ரித்​தேன், அவருக்​கும் சுய நினைவு திரும்​பி​விட்​டது. எல்​லோரும் நலமாக இருக்​கிறோம்​” என்​றார்​.

Read More

நம்​மையெல்​லாம் பாசத்​தோடு கட்​டிப்​போட்​ட​வர் ஏவி.எம்​.சர​வணன் என்று முதல்​வர் ஸ்டா​லின் புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த திரைப்​படத் தயாரிப்​பாளர் ஏவி.எம்​..சர​வணனின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சி, சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள ஏவி.எம். மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. சரவணன் படத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். நிகழ்​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: வரலாற்​றில் தமிழ் திரையுலகத்தை பற்றி குறிப்​பிட வேண்​டுமென்​றால், அதில் நிச்சய​மாக ஏவி.எம். நிறு​வனத்தை குறிப்​பி​டா​மல் இருக்​கவே முடியாது. அப்​பச்சி என்று மரி​யாதை​யுடன் அழைக்​கப்​படும் ‘மெய்யப்ப செட்​டி​யார்’ மறைவுக்கு பிறகு இந்​நிறு​வனத்தை சரவணன் எப்​படி​யெல்​லாம் கட்​டிக் காத்​திருக்​கிறார் என்று அவருடன் நெருங்​கிப் பழகி​யிருக்​கக்​கூடிய ரஜினி​காந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்​பிட்டு சொன்​னார்​கள். நான் சென்னை மேய​ராக இருந்​த​போது கடற்​கரை​யில் நடை பயிற்​சிக்கு செல்​வதுண்​டு. அப்​போது சரவணனும், அவருடைய நண்​பர்​களோடு நடைப​யிற்​சிக்கு வரு​வார். நான் அடிக்​கடி அவரை சந்​தித்து பேசுவதுண்​டு. சென்னை எப்​படி இருக்​கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்​டும் என்​றெல்​லாம் அறிவுரைகளை சொல்​லி​யிருக்​கிறார். இங்கே திறந்து வைக்கப்பட்ட…

Read More

டெல்லி கலவர வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறின. இதில், 53 பேர் உயிரிழந்தனர், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில், கலவரத்தை திட்டமிட்டு கட்டமைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா, ஷாலிந்தர் கவுர் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், நடந்த கலவரத்தில்…

Read More

திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: மொழிப்போர் தளபதி என்றும், எல்.ஜி. என்றும் நம்மால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எல்.கணேசன் அவர்கள் இன்று காலை 5.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்ற செய்தியை சமத்துவ நடைபயணத்தின் போது கேட்டு பெரிதும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகில் உள்ள கண்ணந்தங்குடி கீழையூரில் பிறந்த அண்ணன் எல்.ஜி அவர்கள், இளமைப் பருவத்திலேயே அறிஞர் அண்ணாவின் தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றினார். பேரறிஞர் அண்ணா அவர்களிடமும், முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் அவர்களிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்த அந்தக் காலம் முதல் இன்று வரை என் மீது அளப்பரிய அன்பும், பாசமும் கொண்டிருந்தவர் அண்ணன் எல்.ஜி. ஆவார். 1965 ஆம் ஆண்டில்…

Read More

செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல், உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும்  பன்னீர் கரும்பை  நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு கொள்முதல் செய்வதில் கூட  திமுக அரசு உழவர்களை சுரண்டுவது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பை திமுக அரசு வெளியிடுவதற்கு முன்பாகவே பொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்; ஒரு கரும்புக்கு ரூ.50 விலை வழங்க வேண்டும் என்று கடந்த திசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.  ஆனால், அதன் பின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்த தமிழக அரசு, கரும்பு என்ன விலைக்கு, எவ்வாறு கொள்முதல் செய்யப்படும்? என்பது குறித்து இதுவரை…

Read More

கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் களத்தில் விஜய்யின் தவெக புதிதாக இணைந்துள்ளாலும் கூட, அதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு காரணமாக அவரது இருப்பு திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாகப் பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரலாம் என்று நிபந்தனையை மட்டுமே தவெக வைத்துள்ளது. இங்கும், அங்கும் போய்ப் பார்த்துவிட்ட கட்சிகள் தவெகவில் கடைசி நேரத்தில் கூட ஐக்கியமாகலாம் என்ற கணிப்புகளும் நிலவுகின்றன. இந்தச் சூழலில், பல மாதங்களாகவே திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவு ஒன்றை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில்…

Read More

ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகாம்களை  முன்னாள் எம்பி. சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பணகுடி, மற்றும் வள்ளியூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குச்சாவடி வாக்காளர் சிறப்பு முகாம்களை முன்னாள் எம்பியும், அதிமுக நெல்லை புறநகர் மாவட்ட கழக பொருளாளருமான P.சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, பணகுடி நகரச் செயலாளர் GT.லாரான்ஸ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் இளைய பெருமாள், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கைலாசம், கிளை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read More

பணகுடி அருகே லெப்பை குடியிருப்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் பரிசுகள் வழங்கினார். வள்ளியூர் வடக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் லெப்பை குடியிருப்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் L.ஜெரால்ட் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்பியும், அதிமுக மாவட்ட கழகப் பொருளாளருமான சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் பரிசை பெற்ற அணிக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார். முதல் பரிசை தட்டிச் சென்ற  லெப்பை குடியிருப்பு அணிக்கு சௌந்தரராஜன்  பரிசு வழங்கி அணி வீரர்களை வாழ்த்தினார். 2-வது பரிசு பெற்ற கண்ணன் குளம் அணிக்கு வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பால் துரை பரிசு வழங்கினார். 3வது பரிசு பெற்ற சிதம்பராபுரம் அணிக்கு நெல்லை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்  ராஜா பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்…

Read More

‘திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுகிறது’ என்ற செய்திகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தொகுதி பங்கீட்டில் நிலவும் வாய்க்கால் பிரச்சனைகள் தான். அப்படிப்பட்ட தொகுதி பங்கீடு விவகாரத்தில் தற்போது திமுக ஒரு முடிவு செய்திருப்பதாகவும், விசிகவை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய நகர்வை திமுக மேற்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தேர்தல் பணிகளோடு சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கசிந்த தகவலின் படி, “கூட்டணி கட்சிகள் கடந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனரோ, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இம்முறை சீட் ஒதுக்குவோம்” என சில முக்கிய நிர்வாகிகள் கறாராக சொல்லியிருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில், “திமுகவுக்கு 170 சீட்டுகள்; தோழமைகளுக்கு 64” என…

Read More