Author: Editor TN Talks
மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு போதிய நிதியை வழங்காத போதிலும், தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளில் 80 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் நிதிச் சுமையால் நிறைவேற்றப்படாமல் உள்ளன. திமுகவை எதிர்க்கும் வல்லமை இருப்பதாக நடிகர் விஜய் மற்றும் எதிர்க்கட்சியினர் கூறுவது, அவர்களின் உரிமை. மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக ஜன.2-ம் தேதி திருச்சியில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நடைபயணம் தொடங்க உள்ளது. மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் கூட்டணியில் தொடர்கிறோம். இதுகுறித்துதான் கட்சியின் உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் மதிமுக 10 இடங்களை கேட்டதாக வரும் தகவல் தவறானது. ஆட்சியில் பங்கு கேட்டு, அதனால் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. கூட்டணிக்குள் பிளவை…
31.12.2025 | விசுவாவசு – மார்கழி 16 | புதன்கிழமை திதி: துவாதசி பின்னிரவு 1.48 வரை, பிறகு திரயோதசி. நட்சத்திரம்: கிருத்திகை பின்னிரவு 1.28 வரை, பிறகு ரோகிணி. நாமயோகம்: சாத்தியம் இரவு 9.10 வரை, அதன் பிறகு சுபம். நாமகரணம்: பவம் பிற்பகல் 3.27 வரை, அதன் பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8. யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 1.28 வரை, பிறகு சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 மணி வரை. சந்திராஷ்டமம்: சுவாதி சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30 மணி. அஸ்தமனம்: மாலை 5.53 மணி. ராகு காலம்: மதியம் 12.00-1.30 எமகண்டம்: காலை 7.30-9.00 குளிகை: காலை 10.30-12.00 நாள்: வளர்பிறை. அதிர்ஷ்ட எண்: 2, 7. பரிகாரம்: பால்
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு அரசாங்க சன்மானங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வருமானம் உண்டாகும். பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் மள மளவென்று லாபம் அதிகரிக்கும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு. மேற்கு திசையில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து மகிழ்வை கொடுக்கும். எதையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று மனம் உறுதிப்படும். ரிஷப ராசி அன்பர்களே! ஆசைகள் எல்லாம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். பற்பல வகையில் நன்மைகள் சேரும். தனதானிய சேர்க்கை ஏற்படும். தொழிலில் மேன்மை உண்டாகும். மற்றவர்கள் பொறாமைப்படும் நிலை ஏற்படும். கையிருப்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெரிய சிறப்பு ஏற்படும். மன அமைதி உண்டாகும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து கிடைக்கும். மிதுன ராசி அன்பர்களே! தாமதமானாலும் காரிய வெற்றி பெருகின்ற நாள். பற்பல வகையிலும் நன்மைகள் உண்டாகும். நீங்கள் விருப்பப்பட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும்.…
மேஷம்: குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். ரிஷபம்: முன்கோபம், டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். மிதுனம்: நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகியிருந்த பழைய சொந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். திடீர் பயணம் ஏற்படும். கடகம்: மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் சுறுசுறுப்பைப் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி ஏற்படும். புது இடத்துக்கு கடையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு உண்டு. சிம்மம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும்.…
திமுக – காங்கிரஸ் இடையிலான விவகாரங்களில் ‘தவெக’வை பகடைக்காயாக வைத்து ஆடப்படும் அரசியல் விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விஜய் – ராகுல் இடையிலான சந்திப்பு பற்றிய தகவல் தான் சத்தியமூர்த்தி பவனில் கிசுகிசுக்கப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா? ‘காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்’ என்ற தகவல் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி பூதாகாரத்தை கிளப்பியதன் அடுத்தபடியாக, தற்போது “தமிழ்நாட்டின் நிலுவைக்கடன் மோசமான நிலையில் உள்ளது. உத்திரபிரதேசத்தை விட அதிகமான நிலுவைக்கடன் உள்ளது” என பெயரை குறிப்பிடாமல் திமுக அரசு மீது நேரடித்தாக்குதலை முன்வைத்தார் பிரவீன் சக்ரவர்த்தி. இது ஏற்கனவே கழன்று கொண்டிருக்கும் கூட்டணிக்கும் பெட்ரோலை ஊற்றியது போல் பற்றி எரிந்து வருகிறது. திமுகவிலிருந்தும் விசிகவிலிருந்தும் அடுத்தடுத்து எதிர்தாக்குதல்கள் பிரவீன் சக்ரவர்த்தி மீது தொடுக்கப்பட, உட்சபட்சமாய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையே,…
காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வு பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: பிரவீன் சக்கரவர்த்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். டெல்லியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கேவோ, ராகுல் காந்தியோ, இவர்களை சென்று சந்தியுங்கள் என்று பிரவீன் சக்கரவர்த்திக்கு சொல்லவில்லை. அவர்களின் பெயர்களை பிரவீன் சக்கரவர்த்தி தவறாக பயன்படுத்துகிறார் என்பது எனக்கு தெரிய வந்தது. உத்தரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சியை தூக்கி பிடித்து, தமிழகத்தில் நடைபெறும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை தாழ்த்தி பேசுவதை, விமர்சிப்பதை ஒருபோதும் தமிழ்நாடு காங்கிரஸ் அனுமதிக்காது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் படையெடுப்பது போன்று, பிரவீன் சக்கரவர்த்தியும் படையெடுப்பது ஏன் என்பது புரியவில்லை. இது தேவையில்லாத…
ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: • வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. • தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (30-12-2025): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31-12-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…
மறைந்த தமிழருவி மணியன் மனைவியின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழருவி மணியன் அண்மையில் தாம் நடத்தி வந்த கட்சியை, ஜி.கே. வாசனின் தமாகா கட்சியுடன் இணைத்தார். இந்நிலையில், அவரின் மனைவி திடீரென காலமானார். இதுகுறித்து அறிந்து தமிழருவி மணியனின் இல்லத்திற்கு வைகோ நேரில் சென்றார். பின்னர் தமிழருவி மணியன் மனைவியின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழருவி மணியன், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை வைகோ தெரிவித்தார்.
உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததுடன், ஆபாசமாக திட்டியதாக அமீனால் பீவி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், யு டியூபர் வாராகிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாராகியை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையர், டிசம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்திதுந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, வாராகியின் மனைவி நீலிமா, தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவல் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தனது கணவருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என…
விபத்துக்களை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்துப் பேருந்துகளின் தகுதியை ஆய்வு செய்ய ஆணையம் அமைக்க கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்துக்களில் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்வதாக உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்கள் வெளியிட்டு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சாலை விபத்துக்கள் மூலம் அதிகமான உயிரிழப்புகளை நடப்பதை தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றக் கூடாது, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் அவசர கால…