Author: Editor TN Talks
கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனே அங்கு இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர். கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் 23-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
போதைப் பொருள்கள் அதிகம் விற்கும் பகுதியில் இருக்கும் காவல்நிலைய அதிகாரிகளையும் அரசு தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதும் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற 30 வயது இளைஞர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். திருவாலங்காடு – திருத்தணி மின்சார ரயிலில் அவர் பயணித்த போது, அவருடன் பயணித்த வாலிபர் ஒருவரை 17 வயதுடைய சிறுவர்கள் சிலர் அரிவாளை காட்டி மிரட்டுவது போல வீடியோ எடுத்துள்ளனர். அதனைத் தடுத்த வடமாநில இளைஞரையும் அரிவாளால் வெட்டியதுடன், அதனை வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ஆக வெளியிட்டுள்ளனர். 17 வயதுடைய சிறுவர்கள் பிறரை அரிவாளால் வெட்டுவதும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதற்குமான தைரியம் எங்கிருந்து வந்தது? இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விருத்தாச்சலத்தில் 3 இளைஞர்கள் ஒரு வாலிபரை முட்டி போட வைத்து, இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி, கத்தியை கழுத்தில் வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிறரை தாக்குவதற்கான மனநிலை உருவாவதே தவறானது. ஆனால் இன்றைய இளைஞர்கள் பிறரை தாக்குவது, வெட்டுவது, குத்துவது மட்டுமல்லாமல், அவற்றை வீடியோ எடுத்து சமூக வளைத்தலங்களிலும் பரப்புகின்ற ஆபத்தான செயலையும் அச்சமில்லாமல் செய்கின்றனர். இதற்கு காரணம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கம்தான். போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் இவ்வாறு சீரழிவது, வன்முறையை கையில் எடுப்பது, அவற்றை வெளிப்படுத்துவது என்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளது. போதைக்கு அடிமையாவது தனிநபரை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும். 1985 போதைப்பொருள் தடுப்புச் சட்டப்படி போதைப் பொருட்கள் தயாரித்தல், கடத்துதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்றவை குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். சட்டப்பிரிவு 31-ஏவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க கூட வழிவகை உள்ளது. சட்டத்தில் இவ்வாறு தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் இருந்தாலும் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் கஞ்சா பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவது தினந்தோறும் வழக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அத்தகையவர்களை கைது செய்யும் காவல்துறையினர் ஒப்புக்காக, உடனடி பிணையில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்கு போடுகின்றனர். ஆனால், எங்கிருந்து, எவர் மூலம் கொண்டுவரப்படுகிறது, எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என கண்டறியும் தொடர் சங்கிலி நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இதனால் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றாக தடுக்க முடியவில்லை. தமிழ்நாடெங்கும் நிறைந்திருக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பள்ளி கல்லூரி பருவத்தினர் முதற்கொண்டு முதியவர்கள் வரை வயது வரம்பின்றி பலரையும் போதைக்கு அடிமையாக்கி, அரக்கர்களாக மாற்றுகிறது. பள்ளி கல்லூரிகள் மிகஅருகாமையில் கூட கஞ்சா புழக்கத்தில் உள்ளது. மனித மிருகங்களாக மாறிப்போன போதை ஆசாமிகளால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், கடைத் தெருவுக்கு செல்லும் தாய்மார்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்கிற அச்ச உணர்வு மக்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தண்டனைகளைக் கடுமையாக்குவதுடன், ஆபத்தான போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி குழு 11 மாதங்களுக்குப் பிறகு இன்று அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்திருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திமுக அரசு, இப்போதாவது ககன்தீப்சிங் பேடி குழுவின் அறிக்கையை பெற்றிருப்பதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அறிவித்துள்ள வேலை நிறுத்தமும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தமும் தான் காரணம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், 55 மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த போதே பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான அனைத்து பரிந்துரை அறிக்கைகளும்…
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள் என்று கூறிய குஷி முகர்ஜி, எந்தவொரு வீரருடனும் என் பெயர் இணைத்து பேசப்பட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தயாராகி வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்ஸ்மேனாக போதுமான ரன்களை அவரால் சேர்க்க முடியவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவ், அதன்பின் இந்திய அணி ஆடிய 19 டி20 போட்டிகளில் 218 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். 2025ஆம் ஆண்டு ஆடிய 19 இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. தாணு தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் முடிந்துள்ளது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெறவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் கமலை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சந்திப்புகளும் நடைபெற்றுள்ளன. இதனால் இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கமல் – வெற்றிமாறன் கூட்டணி என்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியானதில் இருந்து, இதற்காக காத்திருப்பதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கமல். அதற்குப் பிறகு வெற்றிமாறன்…
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சம்பவத்தன்று இரவு, தனது நண்பர் புனீத் என்பவரைச் சந்தித்துவிட்டு நள்ளிரவு 11 மணிக்கு விடுதிக்கு நந்தினி திரும்பியுள்ளார். அதன் பிறகு புனீத் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது நந்தினி போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த புனீத் விடுதி மேலாளருக்குத் தகவல் அளித்து, கதவை உடைத்துப் பார்த்தபோது நந்தினி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நந்தினியின் திடீர் மறைவுச் செய்தி தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு சின்னத்திரை கலைஞர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பெங்களூரு காவல்துறையினர்…
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவை அடுத்து, 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். கலிதா ஜியாவின் மறைவை அடுத்து முகமது யூனுஸ், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘‘இன்று நாட்டுக்கு மிகவும் துயரமான நாள். நாட்டின் ஜனநாயக அரசியலின் முன்னணி ஆளுமையாக விளங்கிய கலிதா ஜியா இன்று நம்மிடம் இல்லை. ஜனநாயகம், பல கட்சி அரசியல் கலாச்சாரம், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டம் ஆகியவற்றில் அவரது அசாதாரண பங்கு வரலாற்றில் நிலைத்திருக்கும். தேசத்தின் இந்த கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த துக்க தருணத்தைப் பயன்படுத்தி யாரும் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவோ, நாசகாரச் செயல்களில் ஈடுபடவோ அனுமதிக்காதபடி அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 3 நாட்கள் அரசு…
புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், “இது ரஷ்யாவின் வழக்கமான பொய்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதுவரை பல போர்களை நிறுத்திவிட்டதாக உரிமை கோரும் ட்ரம்ப்புக்கு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வராதது சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஃப்ளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரஷ்ய அதிபர் புதின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை யார் என்னிடம் சொன்னார்கள் தெரியுமா?. புதினே என்னை தொலைபேசியில்…
தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு (COA) ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்கீழ் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகள் ஏற்கெனவே இருந்து வரும் பாரம்பரிய முறையிலும், கணினிவழி முறையிலும் நடத்தப்படும். பாரம்பரிய வழிமுறையிலான சுருக்கெழுத்து தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8-ம் தேதியும், கணக்கியல் தேர்வு பிப்ரவரி 9-ம் தேதியும் தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 14 மற்றும் 15-ம் தேதியும் நடைபெறும். அதேபோல், கணினி வழியிலான தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு மற்றும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (டிச.30-ம் தேதி) தொடங்கி ஜனவரி 19-ம் தேதி முடிவடையும். தேர்வர்கள் https://tndtegteonline.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30-ம்…
புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக ரூ.40 கோடி தருவதாகக் கூறியும் அதை நிராகரித்ததாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, தமிழில் ரஜினியின் ‘தர்பார்’, 12 பி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நேர்மையும் குடும்பத்தின் கொள்கைகளும் பணத்தை விட முக்கியம் என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக என்னை அணுகினர். ரூ.40 கோடி தருவதாகக் கூறினர். அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்கிற கொள்கைக்காக மறுத்துவிட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். 2017-ம் ஆண்டு எனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. 6 முதல் 7 வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்புக்கு மீண்டும் திரும்புவது சவாலானது. சினிமாவில் இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. அந்த மாற்றங்களைப்…