Author: Editor TN Talks
அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைனும், ரஷ்யாவும் நெருங்கியுள்ளன. இது சிக்கலானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று புளோரிடாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், அதிபர் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரண்டரை மணி நேரம் போனில் பேசினார். இரு தலைவர்களுடனும் பேசிய பின் ட்ரம்ப் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உக்ரைனும், ரஷ்யாவும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் எப்போதும் இல்லாத அளவில் நெருங்கியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் நடந்த பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்தது. உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தினாலும், புதின் அமைதியை விரும்புகிறார். அமைதி ஒப்பந்தம் கடுமையானதாக இருக்கும். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன். ஜெலன்ஸ்கி தைரியமானவர். ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் வலுவான…
விபத்து நிகழ்ந்த உடனேயே அசல் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல், திருச்சி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இருவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பேருந்துகள் இயக்கியபோது விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து எங்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டனர். விதிமுறைகளை பின்பற்றாமல் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மதுரை-போடி மற்றும் ஜெயங்கொண்டம்-திருச்சி வழித்தடங்களில் நடைபெற்ற விபத்துகளுக்காக மனுதாரர்களின் அசல் ஓட்டுநர் உரிமங்களை போலீஸார் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து நடந்த மறுநாள் ஓட்டுநர் உரிமங்களை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல. மோட்டார் வாகனச் சட்டப்படி, விபத்து நேரிடும்போது ஓட்டுநர் உரிமங்களை உரிய…
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் என்று கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் ஆடப்படும் போட்டி எப்போதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிப்பது, பாக்சிங் டே டெஸ்ட் என்பது ஏறத்தாழ ஒரு கலாச்சார நிகழ்வு என்பதாகவே அங்கு பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆஷஸ் டெஸ்ட்டிற்கு சாதனைக் கூட்டம். ஆனால் டெஸ்ட் 2 நாட்களில் முடிந்தது கேலிக்கூத்து என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கடுமையாகச் சாடியுள்ளார். அதாவது பிட்ச்சைக் குறைகூறிப் பயனில்லை, இது போன்ற பிட்ச்கள் காலங்காலமாக போடப்பட்டு வருபவைதான், இப்போதைய வீரர்கள் இதில் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு உறுதியும் உத்தியும் பொறுமையும் தைரியமும் இல்லாதிருக்கின்றனர் என்று சாடியுள்ளார். ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டின் திருவிழா போன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மெல்போர்ன் டெஸ்ட் இந்த முறை கேலிக்கூத்தாக முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய இங்கிலாந்து மனங்கள்…
மதுரை மாவட்டம் வண்டியூரில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதை சரி செய்து, சிஎஸ்ஆர் கணக்கெடுப்பில் முறைகேட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கூட்டுறவு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மகா.சுசீந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு 38, வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் அரசு புறம்போக்கு இடங்களில் வசித்த மக்கள், அப்பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு சக்கிமங்கலம், கல்மேடு, ராஜாக்கூர் போன்ற பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பே குடியமர்த்தப்பட்டனர். தற்பொழுது வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொண்டதில் இப்பகுதியில் உள்ள மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டும், அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டும் சுமார் 1000 வாக்குகள் மீண்டும், வாக்குச்சாவடி எண். 337, 338 ஆகிய இரண்டு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்குச்சாவடி…
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு , 10 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து எஸ்எஸ்பி நித்யா ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 31-ம் தேதி இரவு கடற்கரைச் சாலை மற்றும் நகர மையப்பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வரும் 31-ம் தேதி மதியம் 2 மணி முதல் ஜன.1-ம் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மேலும், ஆம்பூர் சாலையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்படும். மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை தொடர்பாக அரசு மருத்துவமனையை அணுக, செயின்ட் ஆஞ்ச் வீதி-செஞ்சி சாலை, சூர்கூப் வீதி-செஞ்சி சாலை வழியாக அவசர வாகனங்கள் அனுமதிக்கப்படும். கடற்கரை சாலையை…
புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவில்லை. ரஷ்யா பொய் சொல்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார். புடினின் வீட்டை குறி வைத்த அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது. அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம்.…
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக இன்று நடந்தது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் ரங்கா, ரங்கா கோஷத்தால் விண்ணதிர்ந்தது. ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் இன்று துவங்குகிறது. இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உள்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல்…
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று(டிச., 30) மாலை திறக்கப்படுகிறது. நாளை (டிச., 31) அதிகாலை முதல் நெய்யபிஷேகம் துவங்கும். மண்டல கால பூஜை முடிந்து டிச., 27- இரவு 10:00 மணி-க்கு நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் துவங்கின. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சபரிமலை சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள் டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. மகர விளக்கு காலத்தில் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேறு பூஜைகள் எதுவும் இன்று இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி மகேஷ்…
சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க. உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சுமார்…
மேஷம்: யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளையெல்லாம் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். மிதுனம்: குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் வெளி வட்டாரத்தில் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுதீரும். அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் நீங்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் ஏற்படும். சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களெல்லாம் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.…