Author: Editor TN Talks

சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க. உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சுமார்…

Read More

மேஷம்: யாரையும் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. ரிஷபம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளையெல்லாம் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். மிதுனம்: குடும்பத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் வெளி வட்டாரத்தில் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம்: அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுதீரும். அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் நீங்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் ஏற்படும். சிம்மம்: நீண்டநாட்களாக விலகியிருந்த உறவினர்கள், நண்பர்களெல்லாம் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.…

Read More

விஜய் ஹசாரே டிராபி தொடரில் பிகார் அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், வெறும் 10 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 310 ஆகும் ராஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் நடந்த பிகாரின் மூன்றாவது பிளேட் குரூப் போட்டியில், 218 ரன்கள் இலக்கை துரத்திச் சென்றபோது வைபவ் சிறப்பாகத் தொடங்கினார். எனினும், 14 வயதான அவர், ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆகாஷ் குமார் வீசிய பந்தில் திப்புவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆட்டமிழந்தார். அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அசத்தினார்.…

Read More

சென்னை-திருத்தணி ரயிலில் கத்தியுடன் 4 சிறுவர்கள் ரீல்ஸ் எடுத்த விவகாரத்தில் திமுக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான… — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) December 29, 2025 சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க…

Read More

ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தனது முந்தைய தீர்ப்பை நிறுத்திவைத்து  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றாக விளங்கும் ஆரவல்லி மலைத்தொடர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. 100 மீட்டர் அல்லது அதற்கு அதிகமான உயரம் கொண்ட மலைகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கொள்ளப்படும் என்றும், 500 மீட்டருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மலைகள் இருந்தால் மட்டுமே அது ஆரவல்லி மலைத் தொடராக கருதப்படும் என்றும் அரசு நிபுணர் குழு அளித்த வரையறையை உறுதி செய்து கடந்த நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பொதுமக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ராஜஸ்தானில் உள்ள 12,081 ஆரவல்லி மலைகளில் 1,048 மலைகள் மட்டுமே 100 மீட்டர் மற்றும் அதற்கும் அதிக உயரம் கொண்டவை என்றும், இந்த புதிய வரையறையால் குறைவான உயரமுள்ள…

Read More

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வட் மாநகராட்சித் தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவார் தலைமையிலான என்சிபி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்மூலம் பவார் குடும்பம் மீண்டும் இணைந்துள்ளது. பிம்ப்ரி-சின்ச்வட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அஜித் பவார், “இரு கட்சிகளும் இணைந்ததால் குடும்பம் ஒன்றுபட்டுவிட்டது. மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் போது, ​​இரு கட்சியினரும் ஒன்றாகப் போட்டியிட முடிவு செய்தனர், இது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. இதன் விளைவு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன, ஆனால் சில சமயங்களில் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். நான் உள்ளூர் தலைவர்களுடன் இடப் பங்கீடு குறித்தும் விவாதித்துள்ளேன், அது விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார். மேலும், ‘கடிகாரம்’ மற்றும் ‘துத்தாரி’ சின்னங்கள் ஒன்றுபட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். பிம்ப்ரி-சின்ச்வட் மற்றும் புனே மாநகராட்சிகள் உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் ஜனவரி 15-ஆம்…

Read More

பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை திமுக அரசு பாழாக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பல் மருத்துவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் திமுக அரசு! பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், அறிவாலயம் அரசின் அலங்கோல ஆட்சிக்கான மற்றொரு சான்று. விடியா அரசிடம் இருந்து தங்களின் வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள, தூய்மைப் பணியாளர்கள் முதல் அரசு மருத்துவர்கள் வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போர்க்கொடி பிடிக்கத் துவங்கிவிட்டனர். நாடு போற்றும் நல்லாட்சி எனத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அறிவாலயத்தின் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை எனில், அரசு வேலையை நம்பி பல கனவுகளோடு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்! பல லட்சம் இளைஞர்களுக்கு…

Read More

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா எந்தவொரு படத்தினையும் இயக்காமல் உள்ளார். தற்போது தனது அடுத்த படத்துக்காக தயாராகி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இதில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் ஃபகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இன்னும் 10 நாட்களில் முடிவாகிவிடும் என்கிறார்கள் திரையுலகினர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.…

Read More

திரிபுராவைச் சேர்ந்த அஞ்செல் சக்மா என்ற மாணவர், டேராடூனில் கொலை செய்யப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெறுப்பை பாஜக இயல்பாக்குகிறது என்றும், நாம் செயலிழந்த சமூகமாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘அஞ்செல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவுக்கு எதிராக டேராடூனில் நடந்த சம்பவம் ஒரு கொடூர வெறுப்புக் குற்றம். வெறுப்பு ஒரே இரவில் தோன்றுவதில்லை. பல ஆண்டுகளாக நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கங்கள் மற்றும் தவறான சித்தரிப்புகள் மூலம் அது நமது இளைஞர்களுக்கு ஊட்டப்படுகிறது. அதோடு, பாஜகவின் வெறுப்பை உமிழும் தலைமை, இதை இயல்பாக்கி வருகிறது. இந்தியா என்பது அச்சம் மற்றும் துஷ்பிரயோகத்தின் மீது கட்டப்பட்டதல்ல. அது, மரியாதை மற்றும் ஒற்றுமையின் மீது கட்டப்பட்டுள்ளது. நாம் அன்பு மற்றுமு் பன்முகத்தன்மை கொண்ட நாடு. சக இந்தியர்கள் குறிவைக்கப்படும்போது அதை பார்த்துக்கொண்டு மவுனமாக இருக்கும் ஒரு…

Read More

மகரவிளக்கு வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிச.30) மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்காக கோயில், சந்நிதானம், நீலிமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தூய்மைப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 27-ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அன்று இரவு நடை சாத்தப்பட்டது. ஐயப்பனுக்கு அணிவித்த தங்க அங்கி மீண்டும் ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கற்பூர ஆழி அணைக்கப்பட்டு மண்டல கால சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தன. இதனைத் தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக நாளை (டிச.30) மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து வைக்க உள்ளார். பின்பு வழிபாடுகள் இன்றி இரவு 11 மணிக்கு நடைசாத்தப்படும். தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை 3 மணி முதல் மகரகால வழிபாட்டுக்கான பூஜைகள் தொடங்கும்.…

Read More