Author: Editor TN Talks

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணியே நீடிப்பார் என  அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் காந்திமதி நியமனத்திற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முனைவர் சௌமியா அன்புமணி 2004-ஆம் ஆண்டு முதல் பசுமைத் தாயகம் தலைவராக இருக்கிறார். அதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு முதலே பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2002- ஐநா புவி உச்சிமாநாடு தொடங்கி, 2009 ஐநா கோபன்ஹெகன் காலநிலை மாநாடு என ஏராளமான சர்வதேச சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். இன்று பரபரப்பாக பேசப்படும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காக்க 2003-ஆம் ஆண்டிலேயே ஆவணப்படம் வெளியிட்டவர் அவர். தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விக்கு வழிவகுத்த ‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’ எனும் மாநாட்டை பசுமைத் தாயகம் சார்பில் நடத்தியவர் அவர்தான். தமிழ் நாடெங்கும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுவளர்த்தவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆவார். நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு…

Read More

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணைவதற்கு டி.டி.வி. தினகரனின் அமமுகவும் ஓ. பன்னீர்செல்வமும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களுக்கும் – விஜய்க்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்றும், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அரசியல் ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக வட்டாரங்களின்படி, கடந்த சில வாரங்களாக இந்த பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன. இதில் தொகுதிப் பங்கீடு, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு, தேர்தலை முன்னிட்டு ஒரு வலுவான கூட்டணியை அமைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. தரைமட்ட அளவில் செல்வாக்கு வளர்த்து வரும் TVK-விற்கு, தினகரன், பன்னீர்செல்வம் போன்ற தலைவர்களின் அனுபவமும் ஆதரவும் பெரும் பயனளிக்கும். கூட்டணி இறுதியானது முன்னாள் அ.தி.மு.க தலைவர்களான தினகரனும் பன்னீர்செல்வமும், மாநிலத்தின் வேகமாக மாறிவரும் அரசியல் களத்தில் தங்களின் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள புதிய கூட்டணிகளை ஆராய்ந்து வருகின்றனர். விஜய்யுடன் இணைவது, அவர்களுக்கு இளைஞர்கள் இடையே வரவேற்பை கொடுக்கும். இது…

Read More

விஜய் ஹ​சாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் தொடரில், ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிக்​கான இந்​திய அணி​யின் துணை கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் விளை​யாட​வுள்​ளார். நாடு முழு​வதும் பல்​வேறு நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்பைக்​கான கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்​திய கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வீரர்கள் அனை​வரும் இந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் விளையாட வேண்​டும் என்று இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. அதன்​படி ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ரிங்கு சிங் உள்​ளிட்​டோர் தாங்​கள் சார்ந்த மாநில அணி​யில் இடம்​பெற்று திறமையை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் காயம் காரண​மாக விலகி இருந்த ஸ்ரேயஸ் ஐயர் தற்​போது பெங்​களூரு மைதானத்​தில் பயிற்சி பெற்று வரு​கிறார். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 2-ம் தேதி அவர் ஜெய்ப்​பூர் வருகிறார். ஜெய்ப்​பூரில் ஜனவரி 3, 6-ம் தேதி​களில் நடை​பெறும் போட்டிகளில் முறையே மகா​ராஷ்டி​ரா, இமாச்சல பிரதேச அணிகளுக்கு எதி​ராக மும்பை…

Read More

வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிகிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில் படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் விஜய் ஆண்டனி கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். விஜய் ஆண்டனி நடிக்கவிருப்பது குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இப்படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று கிராபிக்ஸ் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியுள்ளது சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு கூட்டணி. விரைவில் படப்பூஜையுடன் கூடிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Read More

அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழித்து வரும் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார தொடர்வண்டியில் பயணம் செய்திருக்கிறார். திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தில் அந்த தொடர்வண்டியில் ஏறிய 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டியுள்ளனர். அதை அவர்களில் ஒருவன் காணொலியில் பதிவு செய்திருக்கிறான். இதனால் அச்சமடைந்த சுராஜ், அவர்களை…

Read More

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள அரசியல் பின்னணியிலான திரைப்படம் ‘ஜனநாயகன்’, ரிலீசுக்கு முன்பே அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் கவனம் ஈர்க்கும் வகையில் முன்னேறி வருகிறது. படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், அமெரிக்காவில் அதிகரிக்கும் முன்பதிவு, விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவில் 36 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விநியோகஸ்தர்கள் கூடுதலாக 20 காட்சிகள் மட்டுமே சேர்த்திருந்தாலும், டிக்கெட் விற்பனை 4,403 இலிருந்து 6,093 ஆக உயர்ந்திருப்பது, அமெரிக்காவில் விஜய் படங்களுக்கு இருக்கும் வலுவான ரசிகர் ஆதரவை வெளிப்படுத்துகிறது. தற்போதைய நிலவரப்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் அமெரிக்காவில் ப்ரீமியர் நாளுக்கான முன்பதிவில் 232 காட்சிகளில் திரையிடப்படவுள்ள நிலையில், 6,093 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் படம் $125,515 அளவிலான முன்பதிவு வசூலை பதிவு செய்துள்ளதாக…

Read More

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாமகவின் செயல்தலைவராக உள்ள ஸ்ரீகாந்திமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டார். பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல், சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாமகவின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு தமிழகம், புதுவை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த அமைப்பு ஐநா சபையின் சிறப்பு ஆலோசனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் ஒரு பகுதியாக கடந்த 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் தகுதி உள்ளவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது. அந்த நோட்டீசில், ‘முந்தைய எஸ்.ஐ.ஆர்.ன் போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் நீங்களோ அல்லது உங்கள் உறவினரோ பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருப்பதை உறுதிபடுத்தும் விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. எனவே, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட…

Read More

“தமிழ்நாட்டில் 7 விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, ரயில்களின் நேரம் மற்றும் ஜனவரி 01 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.” ரயில் நேரங்கள் மாற்றம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கிய ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயிலின் வேகம் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடம், ரயில் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் பல்வேறு வந்தே பாரத் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் விரைவு, பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டிற்கான விரைவு மற்றும் பயணியர் ரயில்களில் புதிய கால அட்டவணை ஜனவரியில் அமல்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரயில் அட்டவணை ஏன் ? ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் விரைவு ரயில்களில் வேகத்தை…

Read More

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்இன்று நாள் எப்படி? மேஷ வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். ரிஷபம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மதியத்திற்கு மேல் மன உளைச்சல் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை உண்டு. மிதுனம் தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் ஏற்படும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். கடன் சுமை குறையும். பயணங்களால் விரயம் உண்டு. கடகம் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். எதிர்பார்த்தபடியே தனலாபம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். சிம்மம் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடு கட்டுவீர்கள். அயல் நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல்…

Read More