Author: Editor TN Talks

சென்னை பல்கலைகழக சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு பெரிய பின்னடைவு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை வேந்தரான ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் பல்கலைக் கழக சிண்டிகேட் நிதிச் செயலாளரை உறுப்பினராக சேர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி அதற்கு ஒப்புதல் தராமல் மூன்றாண்டுகள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.இந்த நிலையில், குடியரசுத் தலைவர்…

Read More

காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள மருத்துவர் சதன் திருமலை குமார், கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய தொழில் முன்னேற்றத்திற்கு சென்னை ராயப்பேட்டை சேர்ந்த நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக 50 லட்சம் ரூபாய் கொண்ட இரண்டு காசோலையை சதன் திருமலை குமார் வழங்கியுள்ளார். கடன் தொகைக்கு வழங்கிய காசோலை வங்கியில் செலுத்திய போது சதன் திருமலை குமார் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சதன் திருமலை குமாருக்கு எதிராக காசோலை மோசடி வழக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தாக்கல் செய்தார். சட்டமன்ற உறுப்பினர்…

Read More

உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதி, ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது. ரஷ்ய அதிபர் புதினை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால், அணுகுண்டு வீச தயங்க மாட்டோம் என கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்ய மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான மெத்வதேவ் எச்சரித்திருந்தார். இந்நிலையில், மாஸ்கோ அருகேவுள்ள புதினின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒரு தகவலும், ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. இதை உக்ரைன் மறுத்த போதிலும், பதிலடித் தாக்குதல் இலக்குகளை தேர்வு செய்து விட்டதாகவும், இந்த பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தக்கூடுமோ என்ற பீதியும் ஐரோப்பிய நாடுகளில் நிலவுகிறது. அப்படித் தாக்குதல் நடத்தினால் ஐரோப்பா கண்டத்தில் கடுமையான பேரழிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப், அவசரம் அவசரமாக உக்ரைன் அதிபருடன்…

Read More

திருத்தணி சம்பவத்தை சுட்டிக்காட்டி, கபட நாடக அரசு என்று திமுக அரசை தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம்…

Read More

ஜனவரி 1-ம் தேதி முதல் 65 ரயில்களின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஜனவரி 1-ம் தேதி முதல் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 65 மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கும் ரயில்களை அதிகப்பட்ச வேகத்தில் இயக்குவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. மேலும் வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதை கீழே காணலாம். சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் ரயில்கள்: S. No. Train No. & Description Departure Timings at Source Arrival Timings at Destination Speeded up by in mins       Existing Revised Existing Revised 1…

Read More

மும்பையில் தனியார் பேருந்து மோதி சாலையோரம் நின்ற 4 பயணிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் பகுதியான பாண்டுப் என்ற இடத்தில் நேற்றிரவு 10 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்த காட்சிகள், அப்பகுதியில் இருந்த துணிக்கடை ஒன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பயணிகள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த நிலையில், பேருந்து ஒன்று திடீரென வேகமாக பின்னோக்கி வந்தது. இதையடுத்து, பயணிகள் பதறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். பலர், அருகில் உள்ள கடைக்குள் நுழைந்தனர். எனினும், வேகமாக வந்த பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் கண் முன்பாகவே இந்த பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர்…

Read More

பயமும் ஊழலும் மேற்கு வங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்த நிலையில், அவரை மகாபாரதத்தில் வரும் துச்சாதனனுடன் ஒப்பிட்டு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மம்தா பானர்ஜி, “14 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இருந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். மக்கள் அப்போது பயந்திருந்தனர். எங்கள் ஆட்சியில் மேற்கு வங்கத்துக்கு நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன. இங்கே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க நிறைய செய்யப்பட்டது. இப்போது தேர்தல் வந்துவிட்டது. எஸ்ஐஆர் என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு துச்சாதனன் மேற்கு வங்கத்துக்கு வந்துவிட்டார். எப்போதும் தேர்தல்கள் வந்தவுடன், துச்சாதனனும் துரியோதனனும் அங்கே வருவார்கள். சகுனியின் சீடனான துச்சாதனன், தகவல்களைச் சேகரிக்க வந்துள்ளார். இன்று, மம்தா பானர்ஜி நிலம் கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார். நான் நிலம் கொடுக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? பெட்ராபோலில் நிலம் கொடுத்தது…

Read More

இந்தியாவில் 2025ம் ஆண்டில் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்த ஐ-போன் மாடல் எது என தற்போது பார்க்கலாம். இந்தியாவில் ஆப்பிள் போன் தயாரிப்பு தொடங்கியதும், அதன் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மற்ற போன்களுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் போனின் விலை அதிகமாக இருந்தாலும், அதிலிருக்கும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றுக்காக செல்போன் பிரியர்கள் பொருட்படுத்துவதில்லை. 2025-ம் ஆண்டில் மட்டும் ஐ-போன் 16 மாடல் போன்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் இந்தியாவில் அந்த மாடல் போன்கள், 65 லட்சம் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் நாட்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற சாதனையை ஐ-போன் 16 மாடல் படைத்துள்ளது. இதேபோல், ஆப்பிளின் இன்னொரு தயாரிப்பான ஐ-போன் 15 மாடல் போன்களும், இந்தியாவில் அதிகம் விற்பனையான முதல் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சீனத் தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் ஆப்பிளின் ஐ-போன் 16 மாடல் போன் விற்பனையில் பின்தள்ளியுள்ளது. இது ஐ-போன் மீதான செல்போன்…

Read More

கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. உடனே அங்கு இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர். கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் 23-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

Read More

போதைப் பொருள்கள் அதிகம் விற்கும் பகுதியில் இருக்கும் காவல்நிலைய அதிகாரிகளையும் அரசு தண்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்வதும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதும் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது.  திருத்தணி ரயில் நிலையம் அருகே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் என்ற 30 வயது இளைஞர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். திருவாலங்காடு – திருத்தணி மின்சார ரயிலில் அவர் பயணித்த போது, அவருடன் பயணித்த வாலிபர் ஒருவரை 17 வயதுடைய சிறுவர்கள் சிலர் அரிவாளை காட்டி மிரட்டுவது போல வீடியோ எடுத்துள்ளனர். அதனைத் தடுத்த வடமாநில இளைஞரையும் அரிவாளால் வெட்டியதுடன், அதனை வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ஆக வெளியிட்டுள்ளனர். 17 வயதுடைய சிறுவர்கள் பிறரை அரிவாளால் வெட்டுவதும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிடுவதற்குமான தைரியம் எங்கிருந்து வந்தது? இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விருத்தாச்சலத்தில் 3 இளைஞர்கள் ஒரு வாலிபரை முட்டி போட வைத்து, இரும்பு கம்பி, கட்டையால் தாக்கி,  கத்தியை கழுத்தில் வைத்து, ரத்தம் சொட்ட சொட்ட கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். சிறுவர்கள், இளைஞர்களுக்கு பிறரை தாக்குவதற்கான மனநிலை உருவாவதே தவறானது. ஆனால் இன்றைய இளைஞர்கள் பிறரை தாக்குவது, வெட்டுவது, குத்துவது மட்டுமல்லாமல், அவற்றை வீடியோ எடுத்து சமூக வளைத்தலங்களிலும் பரப்புகின்ற ஆபத்தான செயலையும் அச்சமில்லாமல் செய்கின்றனர். இதற்கு காரணம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பழக்கம்தான். போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் இவ்வாறு சீரழிவது, வன்முறையை கையில் எடுப்பது, அவற்றை வெளிப்படுத்துவது என்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளது. போதைக்கு அடிமையாவது தனிநபரை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை சீர்குலைக்கும். 1985 போதைப்பொருள் தடுப்புச் சட்டப்படி போதைப் பொருட்கள் தயாரித்தல், கடத்துதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்றவை குற்றமாகும். இந்த சட்டத்தின்படி குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். சட்டப்பிரிவு 31-ஏவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்க கூட வழிவகை உள்ளது. சட்டத்தில் இவ்வாறு தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகள் இருந்தாலும் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் கஞ்சா பயன்படுத்துவோர்,  விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவது தினந்தோறும் வழக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அத்தகையவர்களை கைது செய்யும் காவல்துறையினர் ஒப்புக்காக, உடனடி பிணையில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்கு போடுகின்றனர். ஆனால்,  எங்கிருந்து, எவர் மூலம் கொண்டுவரப்படுகிறது, எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது என கண்டறியும் தொடர் சங்கிலி நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை.  இதனால் போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றாக தடுக்க முடியவில்லை. தமிழ்நாடெங்கும் நிறைந்திருக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள்  பள்ளி கல்லூரி பருவத்தினர் முதற்கொண்டு முதியவர்கள் வரை வயது வரம்பின்றி பலரையும் போதைக்கு அடிமையாக்கி, அரக்கர்களாக மாற்றுகிறது. பள்ளி கல்லூரிகள் மிகஅருகாமையில் கூட கஞ்சா புழக்கத்தில் உள்ளது. மனித மிருகங்களாக மாறிப்போன போதை ஆசாமிகளால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள்,  வேலைக்கு செல்லும் பெண்கள், கடைத் தெருவுக்கு செல்லும் தாய்மார்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்கிற அச்ச உணர்வு மக்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது. சாமானிய மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக  தண்டனைகளைக் கடுமையாக்குவதுடன், ஆபத்தான போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Read More