Author: Editor web1

இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.  43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்​கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5…

Read More

தகவல்​தொடர்பு சேவைக்​கான அமெரிக்​கா​வின் புளூபேர்ட்-6 செயற்​கைக்​கோள் இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்​கெட் மூலம் இன்று (டிச. 24) விண்​ணில் பாய்​கிறது. இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்​ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணி​க ரீ​தியாக​வும் செயற்கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்தி வரு​கிறது. அதன்​படி அமெரிக்​கா​வின் AST ஸ்பேஸ்​ மொபைல் நிறு​வனத்​தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்​தொடர்பு செயற்​கைக்​கோளை, இஸ்​ரோ​வின் LVM -3 ராக்​கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 எம்.6-ஐ விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்​கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்​ட​வுன் நேற்று (டிச. 23) காலை தொடங்கியது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு…

Read More

இலங்கைக்கு எதிரான 2வது T20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 22ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தநிலையில், விசாகப்பட்டினத்தில் 2வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சமரி அதபத்து 31ரன்களும், ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்…

Read More

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ளார். முதன்முதலாக இயக்குநராக அவர் அறிமுகமாக உள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தில் நாயகனாக சந்தீப் நடித்துள்ளார். ஃபரீயா அப்துல்லா, ராஜூசுந்தரம், சம்பத்ராஜ், அன்புதாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தமன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகி உள்ள ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்தநிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

பாஜக உடனான கூட்டணிக்கு விஜய் வர வேண்டுமென்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உடனான சந்திப்புக்கு பிறகு சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், விஜய் தனியாக நிற்பதை விட பாஜக உடனான கூட்டணியில் இணைந்து அனைவரும் இணைந்து செயல்பட்டால் வெற்றி எளிதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சருடனான ஆலோசனையில் விஜய் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசியதாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக, பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இப்போது எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்ட தமிழிசை, முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பியூஸ் கோயல் ஆகியோர் இனி அடிக்கடி தமிழ்நாடு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் கூட்டணியால் திமுக வெடவெடத்துப் போய் உள்ளதாகவும்…

Read More

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அரசியல் பேசக் கூடாது என மலேசிய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளநிலையில், வரும் 27ம் தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பொதுவாக விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே அதில் அவரின் பேச்சில் அரசியல் கலந்து இருக்கும். இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசினால், அது அரசியல் நிகழ்ச்சி போன்று…

Read More

குளிர்கால ஒலிம்பிக் விழாவின் துவக்கமான ஒலிம்பிக் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். 71 வயதைக் கடந்தும் இன்றும் இளமைத் துடிப்புடன் செயல்படும் நடிகர் ஜாக்கி சானுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஆசதர்சன நாயகனாவார். ‘தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர்’, ‘போலீஸ் ஸ்டோரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். ஜாக்கி சானின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சுவிட்ஸர்லாந்தில் 78வது ‘லோகார்னோ திரைப்பட விழாவில்’ ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள மிலன்- கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்ஸ்-க்கான ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். இத்தாலியில் உள்ள பாம்பேய் என்ற பழமையான இடத்தில் ஒலிம்பிக் ஜோதியை அவர் ஏந்திச் சென்றார். 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் உட்பட பலமுறை ஒலிம்பிக் ஜோதியை ஜாக்கி சான் ஏந்திச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. டிட்வா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்புவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4 ஆயிரம் கோடி)  நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்தார். இதில் 350 மில்லியன் டாலர் சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும் என்றார். புயலால் பாதிக்கப்பட்ட சாலை, ரயில் மற்றும் சேதமடைந்த பாலங்களை சரி செய்யவும்…

Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நவம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ம் தேதி நிறைவடைந்தது. வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், சரிபார்க்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டன. இந்தநிலையில், SIR பணிகள் நிறைவடைந்து, டிசம்பர்  19ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இருந்தால்  நீக்கப்பட்ட வாக்காளர்கள் படிவம் 6ஐ  பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும்…

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்தில் லாலட்டன் மோகன்லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 12-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து பாபி கொல்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதவாக படக்குழு தெரிவித்துள்ளது.

Read More