Author: Editor web2
உலகில் குடியுரிமை (Citizenship) பெற மிகவும் கடினமான நாடுகள் பல உள்ளன. சட்டப் பாதுகாப்பு, கலாச்சாரக் கட்டுப்பாடுகள், மத அடையாளம், மக்கள் தொகை சமநிலை, பாதுகாப்பு காரணங்கள் போன்றவற்றால் குடியுரிமையை மிகவும் அரிதாக ஒரு சில நாடுகளில் வழங்கப்படுகின்றன. அப்படி உலகில் உள்ள நாடுகளில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் நாடுகளை பற்றிய தொகுப்பினை பார்ப்போம். உலகில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகள் : 1.குவைத் (Kuwait) உலகில் மிகக் கடினமான குடியுரிமை சட்டங்களில் ஒன்று. 20–30 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்காது. அரபு வம்சாவளி அல்லது நாட்டுக்கு விசேஷ சேவை செய்தால் மட்டுமே கிடைக்கும். 2. சவுதி அரேபியா (Saudi Arabia) பிறப்பு மூலம் குடியுரிமை கிடைக்காது. மிக ஆராயனமான தேர்வு முறைகள். மிக உயர்ந்த திறன் கொண்டவர்கள் அல்லது அரச பரிந்துரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி 3.கத்தார் (Qatar) 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும்…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரி மாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு நாடுகள் இரு நாட்டு அதிபர்களுக்கு ஆலோசனை கூறிக்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்த சமயத்தில் கூட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் போர் நிறுத்தம் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவுக்கு வரும்…
தமிழ் திரைப்படத் துறையில் அதிக வருமானம் பெறும் நடிகர்களாக பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர்தான். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்து நமக்கு உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கட்டுரையில் உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி பார்ப்போம். கீழே நீங்கள் பார்க்கப் போகிற நடிகர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மட்டும் எவ்வளவு வருமானம் பெற்றார்கள் என்று பார்க்கப் போகிறீர்கள். குறிப்பாக நீங்கள் பார்க்கப் போகும் தொகை அனைத்தும் வருமான வரி மற்றும் இதர செலவுகள் போக அவர்களுடைய கைக்குச் சென்ற முழு வருமானத்தை தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். உலக அளவில் அதிக வருமானம் ஈட்டிய…
முட்டை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தினசரி உணவில் இடம்பெறும் மிக முக்கியமான சத்துணவாகும். அதன் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் காரணமாக முட்டைக்கு உலகளாவிய அளவில் மாறாத தேவை உள்ளது. இந்த தேவை, அந்தந்த நாட்டின் உற்பத்தி திறன், போக்குவரத்து செலவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நிலை, கோழிப்பண்ணை பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால், முட்டையின் நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது. கீழே உலகின் சில முக்கிய நாடுகளில் ஒரு டஜன் (12) முட்டைகள் எவ்வளவு விலை உள்ளது மற்றும் அவை இந்திய ரூபாயில் எவ்வளவு என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். 1.ஸ்விட்சர்லாந்து – ₹607 2. நியூசிலாந்து – ₹531 3. ஐஸ்லாந்து – ₹517 4. டென்மார்க் – ₹409 5. ஆஸ்திரேலியா – ₹354 6. அமெரிக்கா (USA) – ₹353 7. பிரான்ஸ் –…
ஃபார்முலா ஒன் உலகை சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த லாண்டோ நோரிஸ் இன்று வென்று இருக்கிறார். அபுதாபி கிராண்ட் பிரீ 58 லேப்கள் கொண்டது. இந்த அபுதாபி ரேஸ் சர்க்யூட்டில் ஒரு லேப் 5.281 கிலோமீட்டர் தூரம் ஆகும். இந்த நிலையில் பந்தய தூரமான 306.29 கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக யார் கடந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. உலக சாம்பியனை தீர்மானிக்கும் இந்த பந்தயம் நடப்பதற்கு முன்பாக லாண்டோ நோரிஸ் 408 புள்ளிகளுடன் F1 ஓட்டுநர் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் இருந்தார். மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 396 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த பந்தயத்தில் முதலிடத்தை பிடிப்பவருக்கு 25 புள்ளிகள்(ஒரு வேகமான லேப் ரெக்கார்டை செய்தால் கூடுதல் ஒரு புள்ளி தரப்படும்) தரப்படும் இரண்டாவது இடத்தை பிடிப்பவருக்கு 18 புள்ளிகளும் மூன்றாவது இடத்தை பிடிப்பவருக்கு 15 புள்ளிகளும் தரப்படும். இந்தப்…
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடரில் இன்று இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. போட்டி சுருக்கம் : இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 136 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதனுடைய முதல் இன்னிங்ஸில் 511 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் விளையாடி இங்கிலாந்து அணி அதனுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 241 ரன்கள் மட்டும் தான் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 65 ரன்கள்…
நடிகர் சூர்யாவுக்கு ஒரு சரியான திரைப்படம் தியேட்டரில் வெற்றி படமாக அமைந்து நிறைய வருடங்கள் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அவரது திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் பிளாப் ஆனது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சூரறைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வந்ததால் இரண்டு வெற்றி படங்கள் தியேட்டரில் மிஸ் ஆனது. சூர்யாவும் சரி அவருடைய ரசிகர்களும் சரி தியேட்டரில் ஒரு சரியான வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள கருப்பு திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. அதன் பின்னர் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உடன் இணைந்து ஒரு திரைப்படம் நடித்து முடித்து இருக்கிறார். அது அவருடைய 46வது திரைப்படம். இதனைத் தொடர்ந்து தற்பொழுது அதற்கு அடுத்தபடியாக 47-வது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை மலையாள இயக்குனர் ஜித்து மாதவனிடம்…
இந்திய சினிமா தற்பொழுது ஒரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. வணிகரீதியில் ஆயிரம் கோடி எடுப்பது இனி சுலபமான விஷயம். ஆம் முன்பை விட இந்திய திரைப்படங்களுக்கு தற்பொழுது நல்ல வரவேற்பு உலகம் முழுக்க கிடைத்து வருகிறது. எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வந்த பாகுபலி 2 திரைப்படம் உலக அளவில் முதன்முறையாக ஆயிரம் கோடியை கடந்து மொத்தமாக 1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி 2 திரைப்படம் 2017 ஆம் ஆண்டு திரையில் வந்தது. ஆனால் அதற்கு முன்பே 2016 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் தங்கல் திரைப்படம் வெளியானது. அந்த வருடத்தில் அந்த திரைப்படம் 700 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வருடங்களில் (2017,2018) சைனா, தென்கொரியா, துருக்கி மற்றும் ஜப்பான் நகரங்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. அதன் காரணமாக இந்த திரைப்படம் மொத்தமாக 2000 கோடிக்கு…
இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று நிறைவடைந்தது.2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர் முழுக்க சிறப்பாக விளையாடிய விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார். சர்வதேச அளவில் இது அவருக்கு 22 ஆவது தொடர் நாயகன் விருதாகும். சர்வதேச அளவில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் தற்பொழுது விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி (இந்தியா) – 22 * சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 20 ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) – 17 ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) – 15 சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 13 டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 13 ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்) இருந்து வந்தார். அவரின்…
தேங்காய் மரம் “கல்பவிருட்ஷம்” என்று அழைக்கப்படும் அளவுக்கு மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் தேங்காய் பால் (Coconut Milk) என்பது சமையல், மருந்தியல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய அனைத்திலும் பயன்படும் இயற்கை உணவுப் பொருளாகும். தேங்காயின் உள்ளிருக்கும் மெல்லிய வெள்ளைப் பகுதிகளை துருவி, தண்ணீர் சேர்த்து பிழிந்து எடுக்கும் பாறைநிறமான திரவமே தேங்காய் பால். இது தென்னிந்திய சமையலில் மட்டுமின்றி, உலகம் முழுவதும், குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் பால் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த ஒன்று. இதில் காணப்படும் முக்கிய சத்துக்கள்: நல்ல கொழுப்புகள் (Medium-chain Triglycerides – MCTs). இவை உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும் மற்றும் சக்தி வழங்கும் கொழுப்புகள். லாவ்ரிக் ஆசிட் (Lauric Acid) – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கேப்ரிக் ஆசிட் (Capric Acid) –…