Author: Editor web3

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று கரூரில் விபத்து நடந்த வேலுசாமிபுரம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். விஜய் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திய வாகனம் நின்ற இடம், சாலையின் அகலம் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடங்களை அதிகாரிகள் துல்லியமாக அளவீடு செய்தனர். இவை அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டன. இதுமட்டுமல்லாமல், பிரச்சார வாகன ஓட்டுநரிடமும் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி…

Read More

உளுந்து சூப் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இது குளிர்காலத்தில் ஆரோக்கியமான உடலைப் பராமரிக்க உதவுகிறது. இதை தயாரிப்பதும் மிகவும் எளிதானது. குளிர்காலத்தில் சூடான சூப் குடிப்பதை அனைவரும் விரும்புகிறார்கள். குறிப்பாக உளுந்து சூப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த சூப் குளிர்காலத்தில் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. இதை தயாரிப்பதும் மிகவும் எளிதானது. எனவே, இந்த ஆரோக்கியத்தை அளிக்கும் உளுந்து சூப்பிற்கான எளிதான செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள். உளுந்து சூப் தயாரிக்க, முதலில் உளுந்தை நன்கு கழுவி பிரஷர் குக்கரில் வைக்கவும். போதுமான தண்ணீர் சேர்த்து,  முழுவதுமாக மென்மையாகும் வரை 4-5 விசில் வரை கொதிக்க வைக்கவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிது நெய்யை சூடாக்கவும். நெய் சூடானதும், சீரகத்தை சேர்க்கவும். இப்போது இறுதியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் வெளிர் தங்க நிறமாக மாறும் வரை லேசாக வதக்கவும். இப்போது வேகவைத்த உளுந்தை மற்றும்…

Read More

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிருஷ்டவசமான விஷயம் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸும் தனது குரலை கொடுத்துள்ளார்.  மத்திய அரசு, தனது அதிகார பலத்தை கொண்டு எல்லோரையும் அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அரசியல் சூழ்ச்சிக்காக அவரை அடிபணிய வைக்க தணிக்கை குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவுகிறது. நடிகர் விஜய்யை நிர்பந்தப்படுத்த நினைக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக விஜய் படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்கும். முதல்வர் ஸ்டாலின் சொன்ன கருத்து தான்…

Read More

அமெரிக்கக் கண்டத்தில் நிலைமை சீராக இல்லை.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது கிரீன்லாந்தின் மீது கண் வைத்துள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த டிரம்ப், இப்போது தனது ஏகாதிபத்தியப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிகிறது. வெனிசுலாவை தனது நிர்வாகம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் எந்த விலை கொடுத்தாவது கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. கிரீன்லாந்து பற்றி டிரம்ப் என்ன சொன்னார்? செய்தியாளர்களிடம் டிரம்ப், “தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தில் நமக்கு கிரீன்லாந்து தேவை. டென்மார்க்கால் அதை கையாள முடியாது” என்று கூறினார். இந்தநிலையில், சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. டிரம்பிற்கும் டேனிஷ் அரச குடும்பத்திற்கும் இடையிலான அரசியல் உறவை குடும்ப உறவாக மாற்ற முடியும், இது கிரீன்லாந்து பிரச்சினையைத் தீர்ப்பதை எளிதாக்குகிறது என்று ஒருவர் கூறுகிறார். டென்மார்க் தற்போது கிரீன்லாந்தை டேனிஷ் பேரரசிற்குள் ஒரு பிரதேசமாக…

Read More

இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோ இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி நகர் நோக்கி ராஜ்கார் வழியாக நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ, 2 லட்சம் ரூபாய்,…

Read More

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அஜித்தின் மங்காத்தா படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம் , அந்த படத்தை மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. இதனை எதிர்த்து, படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தனி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் விரிவாக கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவை ரத்து செய்தார். மேலும், திரைப்படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவுக்கு நிவாரணமாக அமைந்தது. ஆனால், இந்த…

Read More

கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், ஜன.12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபி.க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்…

Read More

மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) நான்காவது பதிப்பின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே DY பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி RCB அணிக்கு 155 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது, ஆனால் RCB அணி துரத்தலில் தடுமாறியது. இருப்பினும், நாடின் டி கிளார்க் முதலில் இன்னிங்ஸை நிலைநிறுத்தி, பின்னர் விரைவான வேகத்தில் ரன்கள் எடுத்தார். கடைசி பந்து வரை நடந்த பரபரப்பான போட்டியில், RCB 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 155 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், இந்த ஜோடி உடைந்த பிறகு, தொடர்ச்சியான…

Read More

ஈரானில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவதால், இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையைத் தூண்டியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாத முகவர்களை அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டின. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரை அகங்காரம் பிடித்தவர் என்று  கூறிய அவர், ஈரானியர்களின் இரத்தத்தால் டிரம்பின் கைகள் கறைபடிந்துள்ளன என்றும் குற்றம் சாட்டினார். ஈரானில், டிசம்பர் 28, 2025 அன்று தெஹ்ரானில் உள்ள இரண்டு சந்தைகளில் தொடங்கிய போராட்டங்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ரியாலின் மதிப்பு வீழ்ச்சிக்கு எதிராக நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்துள்ளன. கமேனி தலைமையிலான மத அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் இந்த போராட்டங்கள்…

Read More

தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முன் தினம் திடீரென சரிந்தது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை எகிறியது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் 1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,900க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் 1,03,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275, கிலோவுக்கு அதிரடியாக ரூ.7,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More