Author: Editor web3

அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள விதிகளின் கீழ், இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அனுமதிக்கத் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கத் தடைகளால் முடங்கியிருந்த வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎன்எஸ் அறிக்கையின்படி, வெனிசுலாவின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியா வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மீண்டும் தொடங்க அமெரிக்கா அனுமதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு “ஆம்,” என்று அந்த நிர்வாக அதிகாரி கூறினார். அதே நேரத்தில், இது குறித்த பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ்டோபர் ரைட்டின் சமீபத்திய கருத்துக்களை அந்த அதிகாரி மேற்கோள் காட்டி பேசினார். அதாவது அமெரிக்காவுடன் வெனிசுலா எண்ணெயை ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் விற்கத் தயாராக இருக்கும் என்று ரைட் கூறியிருந்தார். ஃபாக்ஸ் பிசினஸ் உடனான…

Read More

இன்றைய வேகமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை காரணமாக, மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தினமும் இந்தப் பிரச்சனையுடன் போராடுகிறார்கள். அவ்வப்போது மலச்சிக்கல் பொதுவானது மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சனை நீண்ட காலமாகத் தொடர்ந்தால், அது கவலைக்குரியதாக மாறும். மக்கள் பெரும்பாலும் தங்கள் நீண்டகால மலச்சிக்கல் குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மலச்சிக்கல் புற்றுநோயால் ஏற்படுவதில்லை, மாறாக வாழ்க்கை முறை மற்றும் உணவுக் காரணிகளால் ஏற்படுகிறது. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மலச்சிக்கல் ஒரு தீவிர நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, மலச்சிக்கல் எப்போது புற்றுநோயாக மாறும், எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மலச்சிக்கல் என்பது ஒழுங்கற்ற குடல் அசைவுகள், கடினமான மலம், பதற்றம் மற்றும் வாரத்திற்கு 2-3 முறைக்கும்…

Read More

குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பாக மிகவும் தீவிரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (DCA), குழந்தைகளுக்கான ‘அல்மாண்ட்-கிட்’ (Almont-Kid) சிரப்பை உடனடியாகப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த சிரப்பில் எத்திலீன் கிளைக்கால் (EG) எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்தத் துறை அவசர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO) பெறப்பட்ட ஆய்வக அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த ‘டிரைடஸ் ரெமெடீஸ்’ (Tridus Remedies) நிறுவனம் தயாரித்த AL-24002 என்ற தொகுதி எண் கொண்ட அந்த மருந்து கலப்படம் செய்யப்பட்டது என்றும், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிரப் பொதுவாக குழந்தைகளில் ஏற்படும் ஒவ்வாமை, மகரந்த ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. விசாரணையில் தெரியவந்தவை: சோதனையின்…

Read More

டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது, இருப்பினும், இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெறவில்லை. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக கில் இருக்கும் நிலையில், இது மேலும் விவாதப்பொருளாக மாறியது. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு ஷுப்மன் கில் தனது முதல் எதிர்வினையைத் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை( ஜனவரி 11ஆம் தேதி) தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் சுப்மன் கில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். இதற்காக, தேர்வாளர்கள் மீது தனது மரியாதையை வெளிப்படுத்தியதுடன், உலகக் கோப்பை அணிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஷுப்மன் கில் டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார், ஆனால் தற்போது அந்தப் பொறுப்பு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில்,…

Read More

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரி, கடந்த 22 ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ, டிட்டோஜாக், STFI உள்ளிட்ட கூட்டமைப்புகளும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தனிச்சங்கங்களும் தொடர்ந்து களத்தில் இறங்கி இடையறாது போராடி வந்தன. அந்தப் போராட்டங்களின் விளைவாக கடந்த ஜன.3 தேதி புத்தாண்டு பரிசாக, “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)” என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6,75,000 அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட’த்தின் படி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீத தொகை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழக்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். அரசு…

Read More

1100 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியானவர்கள் இருந்தும் நிரப்பாமல் இருப்பது தான் கல்வியை வளர்க்கும் லட்சணமா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1100-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான ஆசிரியர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும். ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்துள்ளார். கோர் டிரம்பின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படுகிறார். அமெரிக்காவில் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமித்துள்ளார். இதை டிரம்ப் ஆகஸ்ட் 22, 2025 அன்று அறிவித்தார். இந்த நியமனத்துடன், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதராகவும் செர்ஜியோ கோர் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 2025-ல் அமெரிக்க செனட்டின் ஒப்புதலைப் பெற்று, நவம்பர் 11 அன்று பதவியேற்ற பிறகு, செர்ஜியோ கோர் தற்போது இந்தியாவில் தனது பணிகளை மேற்கொள்வதற்காக டெல்லிக்கு வந்துள்ளார். அவர் வரும் ஜனவரி 12 திங்கள் கிழமை, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் பதவியை முறைப்படி ஏற்றுக்கொள்வார். இந்தியா வந்தடைந்ததும், செர்ஜியோ கோர் தனது சமூக ஊடகக் கணக்கில், “மீண்டும் இந்தியாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி…

Read More

நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக் குழு பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தை பார்த்த…

Read More

தேமுதிக, அமமுக, புதிய தமிழகம் கட்சிகளுடன் தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில், தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், கூட்டணி வைப்பது அவசியம் என்ற நிலை ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகே, இங்கு கூட்டணி வைத்துதான் அந்த கட்சிகளே ஆட்சியை பிடித்துள்ளதை வரலாறு காட்டுகிறது. அதனால், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், தனித்தே போட்டி என்பதை தான் கூறி வந்தார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவது தொடர்பான சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் விஜய். அதாவது, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு பின் புதுச்சேரி, ஈரோட்டில் மாநாடு நடத்திய அவர், அடுத்ததாக, சேலம் அல்லது தருமபுரி மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளாராம். இருப்பினும் தேமுதிக, அமமுக…

Read More

தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும் ஆனா லேட்டா ஜெயிக்கும் என சர்கார் பட ஆடியோ லாஞ்சில் விஜய் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்காத நிலையில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கும் வரும் 21ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்தநிலையில், தணிக்கை சான்று வழங்குவதில் அரசியல் செய்வதாக, பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையிலும் விஜய், எதுவும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் விஜய் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ‘சர்கார்’ பட விழாவில் விஜய் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. விஜய் பேசுகையில், ஒன்னு மட்டும் உறுதி. தர்மம் தாங்க ஜெயிக்கும்… நியாயம் தாங்க ஜெயிக்கும்… ஆனால் கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும்… அங்க ஒருத்தன் வருவான் பாருங்க. புழுக்கம் ஏற்பட்டா மழை பெய்கிற…

Read More