Author: Editor web3

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்கக் கோரி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ உரையாற்றினர். அதில், இந்தப் போராட்டம் என்பது கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தி வேடிக்கை பார்க்கின்ற பாஜக அரசைக் கண்டித்து, இந்தியா முழுவதும் நடிபெறுகின்ற ஒரு மாபெரும் போராட்டம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழைகாட்டுதல்படி இந்தியா முழுவதும், தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நடந்து கொண்டிருகிறது. மகாத்மா காந்தி பெயரை மாற்ற வேண்டும் என்பதே மோடியின் சித்தாந்தம். மகாத்மா பெயரை இந்திய தேசத்தில் இருந்து அகற்றவேண்டும் என்பதும் அவர்களின் சித்தாந்தம்தான். ஆனால், ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காந்தியின் பெயரை இந்திய மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது. இந்த உலகத்தில் எவ்வளவோ நாடுகள் சுதந்திரம்…

Read More

தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்தால் தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனாலும், அவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்துவருகிறார். இந்த சூழ்நிலையில்தான் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்குமண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜய்யை முதல்வராக்கியே தீருவேன் என்று சூளுரைத்து வரும் செங்கோட்டையன், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மாநாட்டை ஈரோட்டில் பிரமாண்டமாக நடத்தினார். இதையடுத்து, அடுத்த…

Read More

நோபல் அமைதிப் பரிசு கிடைக்காததால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். சமீபத்தில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்தப் பரிசை வழங்குவது குறித்து விவாதிக்க, அவரைச் சந்திக்கப் போவதாக டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், நோபல் அமைதிக் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டு, அந்தப் பரிசை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. மரியா கொரினா மச்சாடோவின் அறிக்கை: நோபல் பரிசு பெற்றவரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோ, அந்த விருதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்க விரும்புவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, நார்வே நோபல் குழு இந்த அறிக்கையை வெளியிட்டது. நோபல் பரிசை ரத்து செய்யவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ ​​முடியாது என்றும், ஒருமுறை அறிவிக்கப்பட்டால், அந்த முடிவு என்றென்றும் செல்லுபடியாகும் என்றும் நோபல் குழு கூறியுள்ளது. அமெரிக்கா-வெனிசுலா பதட்டங்கள்: அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு வருகை தரும்…

Read More

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வியாழன், வெள்ளியுடன் சேர்த்து சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் விடுமுறை கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த முறை விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல வழக்கமாக ரூ.1,800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.4,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கும் அதே அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மதுரைக்கு செல்ல ரூ.1,200 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.3,500 வரையும்,  கோவைக்கு ரூ,1,200 வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ 3000 வசூலிக்கின்றனர். பெங்களூரு போன்ற நகரங்களுக் கும் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் இளைஞர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுபோன்ற…

Read More

செயல்படும் பயங்கரவாத வலையமைப்பை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட Operation Hawkeye Strike நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்க மத்திய கட்டளைப் படை (CENTCOM) சிரியாவில் உள்ள பல இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) இலக்குகள் மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொண்ட சென்ட்காம்,  சிரியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகளை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதல் அமெரிக்க நேரப்படி மதியம் சுமார் 12:30 மணிக்கு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. சென்ட்காம் அமைப்பின்படி, இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அமெரிக்கப் படைகள் மற்றும் நேச நாட்டுப் படைகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பது, எதிர்கால அச்சுறுத்தல்களை அகற்றுவது மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.  மேலும்”எங்கள் படைகளுக்கு எங்கு தீங்கு விளைவிக்க முயன்றாலும், அவர்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுவார்கள் என்று சென்ட்காம் அமைப்பு…

Read More

கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரசார வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அதனை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நாளை (ஜன.12 ஆம் தேதி) விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்திக்க இருக்கிறார். அதாவது, கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அவர் டெல்லி புறப்படுவதாக முதலில் கூறப்பட்டது. இந்தநிலையில் நாளை காலை 7 மணிக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், இந்த விவகாரத்தில் விஜய்க்கு அனுப்பப்பட்ட சிபிஐ-யின் சம்மன் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்க்கு BNSS 179 பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம்…

Read More

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பரிசு பணம் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ரூ.3000 எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (ஜன.10) சென்னையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். மக்களின் வாக்கை பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிற நாங்கள் தனித்து நிற்போம். கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும் துணிவும் தேவை. வணங்குகிற சாமியைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சி இருக்கும், மக்களின் வாக்கை எப்படி எல்லாம் பறிக்கலாம் என்று நினைக்கிற ஒரு கட்சி இருக்கும். தேர்தல் அரசியலில் சிந்திக்கிற எல்லோரும் ஒரு பக்கம் நிற்பார்கள். மக்கள் அரசியல் பற்றி சிந்திக்கிற கூட்டம் நாங்கள் தனியாக நிற்கிறோம்.…

Read More

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டி உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், நாளை (ஜன.12) விஜய் நேரில் அழைத்து விசாரிக்கவுள்ள சிபிஐ. இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரூர் தீர்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்திற்க்கு சென்சார் வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில் படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளது. இந்த விசாரணையும் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது. இருப்பினும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் நோக்கில், சென்சார் வழங்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் கட்சியின் முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனா மீது விஜய் செம கடுப்பில்…

Read More

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பராசக்தி படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.20 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ (1952) என்ற பெயரைத் தலைப்பாக வைப்பதே ஒரு மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை ஏற்று, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் களமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம்தான் பராசக்தி‘. சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), ஸ்ரீலீலா நடிப்பில் நேற்று (ஜனவரி 10) பொங்கல் வெளியீடாக திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசில் வேலை செய்யும் சிவகார்த்திகேயன், 1965-ல் நடக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் எப்படி ஈர்க்கப்படுகிறார் என்பதே கதை. அரசியல் விழிப்புணர்வுடன் தொடங்கும் போராட்டம், ஒரு கட்டத்தில் அதிகார வர்க்கத்திற்கும் (ரவி மோகன்) அவருக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறுகிறது. தனது வழக்கமான என்டர்டெயினர் பாணியை விட்டுவிட்டு, ஒரு சீரியஸான மாணவர் தலைவனாக மாற முயன்றுள்ளார்…

Read More

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வீரர் ரிஷப் பந்த் விலகியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் இன்று (ஜனவரி 11ஆம் தேதி) தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. காயம் காரணமாக ரிஷப் பந்த் ஒருநாள் போட்டி அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை பரோடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, ரிஷப் பந்த் பிசிஏ மைதானத்தில் வலியால் துடித்துள்ளார். ரிஷப் பந்தை தவிர, கே.எல். ராகுலும் ஒருநாள் போட்டி அணியில் விக்கெட் கீப்பராக உள்ளார். காயமடைந்த ரிஷப் பந்திற்குப் பதிலாக மாற்று வீரராக மற்றொரு விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இஷான் கிஷன் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம் என்று யூகங்கள் எழுந்துள்ளன.…

Read More