Author: Editor web3
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக…
இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளதாக இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இன்று ஜனவரி 12, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அந்த ஆண்டின் தனது முதல் திட்டத்தை தொடங்கியது. ஸ்ரீரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 10:17 மணிக்கு 16 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டன. இருப்பினும், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் அதன் திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றதால் இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் கூறுகையில், “பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் முடியும் வரை அதன் செயல்பாடு சாதாரணமாகவே இருந்தது. இருப்பினும், மூன்றாம் கட்டத்தின் முடிவில், ராக்கெட்டின் சுழற்சி வேகத்தில் ஒரு சிறிய விலகல் காணப்பட்டது, அதன் பிறகு அது பாதையை விட்டு விலகிச் சென்றது. நாங்கள் தரவுகளை ஆய்வு செய்து வருகிறோம் என்று கூறினார். அதாவது, (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட…
கிரிக்கெட் வரலாற்றில், தங்கள் வேகம் அல்லது சுழல் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களைத் திணறடித்த பல பந்துவீச்சாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், வேகம் அல்லது சுழற்சி இல்லாமலேயே, துல்லியமான லைன்–லெந்த் மற்றும் அபாரமான கட்டுப்பாட்டால் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தவர்களும் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத பெயர் பாபு நாட்கர்னி. 1964 ஆம் ஆண்டு இதே நாளில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகின் மிகவும் எக்னாமிக்கலான (economical) பந்துவீச்சு ஸ்பெல் என்ற சாதனையை அவர் படைத்தார். அந்த சாதனை இன்றுவரை கிரிக்கெட் உலகில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளது. 1964 ஆம் ஆண்டில், இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்காக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது, பாபு நாட்கர்னி தனது பந்துவீச்சால் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான நாட்கர்னி, தொடர்ச்சியாக 21 ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசி, பேட்ஸ்மேன்களை…
மும்பையின், எம்.என்.எஸ் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்ணாமலையின் மும்பை யாத்திரை குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என்றும் மும்பை வருவது உறுதி என்றும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, பராசக்தி படம் முரசொலி போல் களத்தில் இருக்கும் என்று கமல்ஹாசன் சொல்லி இருக்கிறார். நியாயமாக பேசிய கமல்ஹாசன் கருத்தை ஏற்கிறேன். இந்த படம் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தை சொல்லி இருக்கிறது. 1965ம் ஆண்டு இந்தி திணிக்க காங்கிரஸ் கட்சி செய்த அடாவடித்தனத்தை படம் தெளிவாக சொல்லி இருக்கிறது. பராசக்தி படக்குழுவிற்கு வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். எங்கே ஆப்பு செய்தார்கள் என்று திமுகவினர் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இலங்கையில் இன படுகொலை செய்தனர். 2026ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் யாரொல்லம் கூட்டணிவைக்கிறார்களோ பராசக்தி முரசொலியாக பரவட்டும். தீ…
இஸ்ரோவின் 2026 ஆம் ஆண்டின் முதல் திட்டமாக இன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து EOS-N1 உட்பட 16 செயற்கைக்கோள்கள் PSLV C-62 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 2026 ஆம் ஆண்டின் முதல் விண்வெளிப் பயணத்தை இன்று, திங்கட்கிழமை (ஜனவரி 12, 2026) காலை 10:17 மணிக்கு தொடங்கியது. இந்தத் திட்டத்தில், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் ஈஓஎஸ்-என்1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் முதன்மைப் பேலோடாக ஏவப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 துணைச் செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி-டிஎல் வகை ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த 64வது பிஎஸ்எல்வி பயணத்தில், பேலோடானது 505 கிலோமீட்டர் உயரமுள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். EOS-N 1 (Anvesha): பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்காக (DRDO) உருவாக்கப்பட்ட, சுமார் 400…
தேர்தல் நெருங்கும் சூழலில் பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 2007.2025 ல் அனுப்பப்பட்டது. இக்கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிலும் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுவரை தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில்…
“ரஷ்யா ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 வீரர்களை இழந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதம் முதல் ரஷ்யா தினமும் குறைந்தது 1,000 வீரர்களை இழந்து வருவதாக அவர் கூறினார். இதை ஒரு ‘பைத்தியக்காரத்தனம்’ என்று குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர விடாமல் தடுப்பதற்காகவே ரஷ்யா இவ்வளவு பெரிய விலையைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றிணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த உக்ரேனிய அதிபர், இந்த யுத்தம் ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறன் இன்னும் உலகிற்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளது என்றார். ரஷ்யாவைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து கூட்டாளி…
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜன.10)தங்கம் விலை கிராமுக்கு ரூ.ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்றும் (ஜன.12)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.12,000 அதிகரித்து ரூ.287,000க்கும், கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது. 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 91 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல் கேப்டன் ஷுப்மன் கில் 56 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணியில் கையில் ஜேமீசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய…
வரும் சட்டமன்ற தேர்தலிலும் கோவையிலேயே அண்ணாமலையை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். ஆனாலும், அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளே கோவை தொகுதியில் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும். ஏனென்றால், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அப்பகுதியிலேயே களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் அல்லது வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.