Author: Editor web3

அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது. தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது. இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், என் டி ஏ கூட்டணியில் இருந்து தாங்கள் இன்னும் விலகவில்லை என கூறியிருந்தார். அதேபோல், திமுக கூட்டணியில் சேரவேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்திவருவதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார், இதுதொடர்பாக வட்டாரங்களிடம் கேட்டறிந்தபோது, அன்புமணிக்கு எதிரான மனநிலையில், இருக்கும் ராமதாஸை சமாதானம் செய்ய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசி வருவதே காரணம் என கூறப்படுகிறது. அதாவது, தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த சண்முகம், பாமக ஒன்றிணைப்பு, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு உள்ளிட்டவைகள் குறித்து பேசியதாகவும் இதனால், ராமதாஸ் மன மாறி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று காலை கடலூர், விருதுநகர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மாலையிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. அப்போது, தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா?, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்துக்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம்.

Read More

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய சந்தையில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று திங்கள் கிழமை (ஜன.12)தங்கம் விலை கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,120-க்கும், சவரன் ரூ.1,04,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் (ஜன.13)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,170க்கும், ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் சுமார் ரூ.4,560 அதிகரித்துள்ளது குறிபிடத்தக்கது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.292,000க்கும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.292க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More

திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் அமைச்சர் ஐ பெரியசாமி மேடையில் பேசும்போது, ஆத்தூரில் சேர்மனாக இருந்த மேரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. மேரியின் பதவி காலமே முடிந்து விட்டது அவர் Retired ஆகவில்லை. அரசியலில் No Retirement – ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் Retirement ஆகுவோம் என்று கனவு காணாதீர்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 96 வயது வரை அரசியலில் இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதேபோல் முதலமைச்சரும் 100 வயது வரை தமிழ்நாட்டை ஆளப் போகிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது. யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று நினைத்து விடாதீர்கள். குறைகள் இல்லாமல் யாரும் இல்லை. அனைவருக்கும் கனவு இருக்கும். எதையும் வெளிப்படையாக கூற முடியாது. மாமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் மேயராக…

Read More

ஈரான் தற்போது கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாடு தழுவிய போராட்டங்கள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தியுள்ளன. இணையம் மற்றும் மொபைல் சேவைகள் நிறுத்தப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்த நெருக்கடி ஈரானுடன் மட்டுமல்ல; இது இந்தியா போன்ற நாடுகளையும் பாதிக்கலாம். ஏனெனில் அதன் மூலோபாய மற்றும் வர்த்தக நலன்கள் ஈரானுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இதற்கிடையில், ஈரானுடன் எந்தவொரு வர்த்தகத்தையும் நடத்தும் எந்தவொரு நாடும் கூடுதலாக 25 சதவீத வரிக்கு உட்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் வணிக கூட்டாளியாக இருப்பதால், இந்த செய்தி இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருவதாக கூறிய அவர், இதுவே இறுதியான முடிவு எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் சீனா, இந்தியா, UAE, துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும்போது அதிக வரிச்சுமையை சுமக்க நேரிடும். எனவே, இந்தியாவில் பொருள்களின்…

Read More

ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சென்சார் சான்றிதழ் வழங்க கோரி படக்குழு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட இருந்தது. ஆனால் வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை நாளை நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது, மேலும், வழக்கை முடித்த கையோடு, விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய கேவிஎன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது. இருப்பினும், ‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’, ஜீவா நடித்துள்ள…

Read More

வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்புவதாவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானில் இணையச் சேவையை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்க்குடன் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார், இஸ்லாமியக் குடியரசில் பெரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தனது எச்சரிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தலைவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்ததாக டிரம்ப் கூறினார். “ஈரான் தலைவர்கள் நேற்று தொடர்பு கொண்டனர். அவர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அவர்கள் பேச விரும்புகிறார்கள்,” என்று Air Force One விமானத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் டிரம்ப் எச்சரித்தார். ஈரான் அரசாங்கம் 2022-ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின்படி, இந்த வன்முறைப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானோர்…

Read More

அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ள நிலையில், தொகுதி வாரியாக அவர்களிடம் இபிஎஸ் நேர்காணல் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக நேற்று எடப்பாடி பழனிசாமி நேர்க்காணல் நடத்தினார். 3வது நாளாக இன்று, விருதுநகர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டங்களில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்திவருகிறார். அப்போது, நேர்காணலுக்கு வந்தவர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளது. நம்பிக்கையோடு இருங்கள். அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அனைவரும்…

Read More

வெனிசுலாவின் செயல் அதிபராக தன்னை தானே அறிவித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து அமெரிக்கா சிறைப்படுத்தியுள்ள நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு பரபரப்பை கிளப்பி உள்ளது. அமெரிக்கா சமீபத்தில் வெனிசுலாவைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் கடந்த வாரம் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முறையாகப் பதவியேற்றார். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” என்று காட்டும் ஒரு புகைப்படத்தை இன்று (ஜனவரி 12) பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம், திருத்தப்பட்ட விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதில், டிரம்ப் ஜனவரி 2026 வரை “வெனிசுலாவின் அதிபராக” இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபராகப் பதவி வகித்த அவரது…

Read More

சர்வதேச பட்டம் விடும் விழா 2026 இன்று (ஜனவரி 12) அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்றது, இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கலந்து கொண்டனர். மெர்ஸ் தனது இந்திய பயணத்தை பாபுவின் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கினார். ஆசிரமத்தை அடைந்ததும், இரு தலைவர்களும் மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.. அகமதாபாத் பட்டம் விடும் திருவிழா 1989-ல் தொடங்கியது. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில், இந்தத் திருவிழா மேலும் பெரும் புகழைப் பெற்றது. தற்போது, ​​உலகின் பல நாடுகளும் இந்தத் திருவிழாவில் பங்கேற்கின்றன. ஃபிரெட்ரிக் மெர்ஸின் வருகை, இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெறுவதைக் குறிக்கிறது. இந்த ஆண்டு, இரு நாடுகளும் தங்களின் 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளையும் 25 ஆண்டுகால மூலோபாய கூட்டாண்மையையும் கொண்டாடுகின்றன. சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவில் இரு தலைவர்களும் வண்ணமயமான பட்டங்களை கண்டு ரசித்தனர்.…

Read More