Author: Editor web3

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், படகுகளை மீட்க கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதனிடையே, நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தென்னரசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், படகில் இருந்த ஜார்ஜ், சுதன், கனகராஜ், சுமித், பரலோக ராஜ், கோபி, ஆரோக்கிய ரூபட், பிரேம்குமார், தினேஷ், ராஜேஸ் ஆகிய 10 மீனவர்களை இன்று (செவ்வாய்கிழமை)…

Read More

வரும் 23ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், சென்னை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடல் மைதானத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், திடீரென சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை பாஜகவினர் முடுக்கிவிட்டுள்ளனர். முன்பே வெளியான தகவலின்படி, என்.டி.ஏ. கூட்டணியை இறுதிசெய்து, பிரதமர் மோடி பொதுகூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்…

Read More

பாஜக தேசியத் தலைவர் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. இருப்பினும், நிதின் நபின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தலைவர் தேர்தலுக்கான தேதி இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களின்படி, பாஜக (BJP) தேசிய தலைவர் தேர்தல் ஜனவரி 19–20 தேதிகளில் நடைபெற உள்ளது. ஜனவரி 19 அன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்; ஜனவரி 20 அன்று தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பத்து கட்சி மற்றும் அமைப்பு தலைவர்கள் முன்மொழிவாளர்களாக (proposers) செயல்பட உள்ளனர். கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி, நிதின் நபீன்தான் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டால், அந்தப் பதவியை வகிக்கும் இளைய நபர் இவராக இருப்பார். அவரது பதவிக்காலம் ஜனவரி 2029 வரை நீடிக்கும். 2029-ல் வரவிருக்கும் மக்களவைத்…

Read More

ஓபன்ஏஐ நிறுவனம் ஜனவரி 7 ஆம் தேதி, ChatGPT ஹெல்த் என்றழைக்கப்படும் ஆரோக்கியம் சார்ந்த ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க, மருத்துவப் பதிவேடுகளைப் பதிவேற்ற மற்றும் ஆரோக்கியப் பயன்பாடுகளை இணைக்க அனுமதிக்கிறது. இந்த புதிய பிரிவு, ஆப்பிள் ஹெல்த்(Apple Health ) மற்றும் மைஃபிட்னஸ்பால்(MyFitnessPal) போன்ற செயலிகளை இணைப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் உடல்நலம் குறித்த தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. சாட்போட்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் சுகாதாரத் தொடர்பான கேள்விகளும் அடங்குவதால், பிரத்யேகமாக ChatGPT Health வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி, பயனர்கள் சுகாதாரத் தகவல்களைத் தேட வேண்டியதில்லை. இது சுகாதாரத் தொடர்பான உரையாடல்கள் மிகவும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் மாறும் ஒரு பிரத்யேக இடத்தை வழங்குகிறது. இந்த அம்சம் மக்கள் தங்கள் சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் அல்லது ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது. ஒரு அறிக்கையின் சுருக்கத்தை மதிப்பாய்வு…

Read More

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள பராசத் பகுதியில் நிபா வைரஸ் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இரண்டு செவிலியர்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகத்தின்பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கல்யாணி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கும் நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி உறுதிப்படுத்தலுக்காக இந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பெண் செவிலியர் பத்து நாட்களுக்கு முன்பு பூர்வா பர்த்வான் மாவட்டத்தின் கடோயாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியிருந்தார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். டிசம்பர் 31 அன்று, அவர் கடோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நிலை…

Read More

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, தனி விமானம் மூலம் சென்ற விஜய் நேற்று காலை 11.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். கடந்த டிசம்பர் மாதம் 3 நாட்கள் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது விஜயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இருப்பினும், சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் கூறிய பல்வேறு முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகளிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு…

Read More

2025ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது  முதுமுனைவர் மு.பெ. சத்தியவேலுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மகாகவி பாரதியார் விருது – கவிஞர் நெல்லை ஜெயந்தா. தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள் மொழி. அண்ணல் அம்பேத்கர் விருது- விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், பெருந்தலைவர் காமராசர் விருது – எஸ்.எம்.இதயதுல்லா, தமிழ் தென்றல் திரு.வி.க.விருது – முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.சப.…

Read More

பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது. கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.…

Read More

வரும் ஜன.20ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள்,ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யத்தை ரூ.6,750 ஆக உயர்த்தி வழங்​கு​வது, பணிக்​கொடை ரூ.5 லட்​சம், காலி​யாக​வுள்ள 60 ஆயிரம் சத்​துணவு, அங்​கன்​வாடி பணி​யாளர் இடங்​களை நிரப்​புவது, அரசு ஊழியர்​களைப் போன்று 12 மாத மகப்​பேறு விடுப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி 8ம் தேதி சத்துணவு ஊழியர்கள் அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்தவுடனேயே ஜன.20ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்ட செயலாளர் ஜெயபாக்கியம் பேசுகையில், வருகிற ஜனவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சத்துணவு மையங்களை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Read More

2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது.  பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பகா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி  தொடங்கி வைத்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது.  சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதாவது கடந்த 11-ந்தேதி வரை 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 1 கோடியே 86 லட்சத்து 23…

Read More