Author: Editor web3

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியடைந்தார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து, தவறான தகவலை தெரிவித்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், வீரமணியின் வருமானம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த சொத்துக்களையும், அவரது வருமான வரிக் கணக்குகளையும் ஆய்வு செய்த வருமான வரித்துறை, 14 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளதாக இடைக்கால அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக வீரமணிக்கு எதிராக தேர்தல் அதிகாரி, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

Read More

3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை கூடல் நகர் பகுதியில் கால்வாய் பாலம் மற்றும் கரிசல் குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் இரண்டாம் தளத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரை மாநகர் கூடல் நகர் மாநகராட்சி வார்டு 2 ல் மதுரை மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கூடுதல் பாலம் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. வார்டு 2 ன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15 லட்சம் செலவில் தொகுதி மேப்பாட்டு நிதியில் இருந்து கூடுதல் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. 24…

Read More

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 -ஐ நிறைவேற்றிவிட்டதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். திமுகவின் ஆட்சியில் துறை ரீதியிலான ஊழல் பட்டியலை தயாரித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை 2 நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுகவின் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற திராவிட பொங்கல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுக ஆட்சியில் மக்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கின்றன. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகளும் மீதமுள்ள நாட்களில் நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதில் வேடிக்கை…

Read More

வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்தியாவின் நட்சத்திர வீரர் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பது சந்தேகமே என்று கருதப்படுகிறது. 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு கவலை அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அணியின் இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனான திலக் வர்மா காயம் அடைந்துள்ளார். அவரது காயம் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுவதால், நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. மேலும், அவர் சரியான நேரத்தில் குணமடையவில்லை என்றால், உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பும் கேள்விக்குறியாகலாம். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விளையாடுவதற்காக திலக் வர்மா ராஜ்கோட்டில் இருந்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்திகளின்படி, புதன்கிழமை காலை உணவுக்குப் பிறகு அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஆரம்பத்தில், அது ஒரு சிறிய அசௌகரியம் என்று அவர் நினைத்தார், ஆனால் வலி அதிகமானதும்,…

Read More

எந்த வெளிநாட்டு சக்தியும் ஈரானை அச்சுறுத்த முடியாது என்றும், யாராவது தாக்கினால், அவர்களின் “கை துண்டிக்கப்படும்” என்றும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் போராட்டக்காரர்கள் வன்முறைக்கு ஆளானால் அல்லது கொல்லப்பட்டால், அமெரிக்கா அவர்களுக்கு உதவும் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் அறிக்கை வந்துள்ளது. தனது ட்ரூத் சோஷியல் பதிவில், டிரம்ப், “அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றாலோ அல்லது வன்முறையில் கொன்றாலோ, அமெரிக்கா அவர்களை மீட்கும். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று எழுதினார். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு வெளிப்படையான அச்சுறுத்தலை விடுத்தார். போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறையை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஈரானின் உயர்மட்ட மதத் தலைமையை உரையாற்றிய செனட்டர் கிரஹாம், “சிறந்த வாழ்க்கையை…

Read More

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சட்டமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி பங்கீடு தொடரபாக அதிமுகவும் பாஜகவும் பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பாமக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இன்னும் சிலரை கட்சியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருப்பகுதியாக நேற்று அவசரமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஓ.பி.எஸ். டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, தமிழகம் திரும்ப டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம்…

Read More

கோவிட்-19 காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நேரம் மற்றும் அட்டவணையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை எந்த நேரத்திலும் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஒரு மாதத்திற்கு தொடரும் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. கூடுதலாக, மாற்றாக, குடிமக்கள் அதிகாரப்பூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு பாதுகாப்பான வலை போர்டல் அல்லது மொபைல் செயலி மூலம் சுயமாக கணக்கெடுக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், அங்கு அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் சொந்த தகவல்களை வழங்க முடியும். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

Read More

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49) காலமானார். சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார்.இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். தனது மகனின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று என் வாழ்வின் இருண்ட நாள். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு மகன் தனது தந்தைக்கு முன்பே செல்வது இயற்கை அல்ல. அவர் வெறும் என் மகன் மட்டுமல்ல, என் நண்பன் மற்றும் பெருமையும் கூட” என்று தெரிவித்துள்ளார். https://x.com/AnilAgarwal_Ved/status/2008937277184233619? மேலும் அந்த பதிவில், ” நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக்…

Read More

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று பாமக தலைவர் அன்புமணி நேரில் சந்தித்தார். அப்போது சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து சட்டசபை தேர்தல் பாமகவுடனான கூட்டணி உறுதியான நிலையில், எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு இரவு 10 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணியில் மேலும் சிலரை இழுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனையின்போது, ஓ. பன்னீர் செல்வ, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியை 10 நாட்களுக்கு இறுதி செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார் அமித் ஷா. இதனால் திமுக கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக – பாஜக ஒருங்கிணைந்த கூட்டணியில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்று…

Read More

சென்னையில் இருந்து 1070 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் நிலைக்கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது புயல் சின்னம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அது காரைக்காலில் இருந்து 920 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1070…

Read More