Author: Editor web3
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடுமையான தடைகளை விதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்தியா மற்றும் சீனா மீதான அமெரிக்க வரிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும், சில சந்தர்ப்பங்களில் 500 சதவீதத்தை எட்டும். இந்த நடவடிக்கை உக்ரைன் மோதலுக்கு மத்தியில் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மசோதாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சமூக ஊடகங்களில் அறிவித்தார். டிரம்புடன் நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்ததாகவும், அடுத்த வாரம் காங்கிரஸில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். லிண்ட்சே கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டல் ஆகியோரால் கூட்டாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் யுரேனியத்தை தெரிந்தே வாங்கும் நாடுகள் மீது தடைகளை விதிக்கும். இந்த கொள்முதல், ரஷ்யா…
பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான போராட்டத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும் நெதன்யாகுவும் மீண்டும் வலியுறுத்தினர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் புதன்கிழமை (ஜனவரி 7, 2026) தொலைபேசி மூலம் பேசினர். இந்த உரையாடலின் போது, இரு தலைவர்களும் மூலோபாய கூட்டாண்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “எனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதும், அவருக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. வரும் ஆண்டில் இந்தியா-இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். பிராந்தியத்தின் நிலைமை குறித்த எங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டோம், மேலும் பயங்கரவாதத்தை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை மீண்டும் வலியுறுத்தினோம்.” இரு நாட்டு பிரதமர்களும் முன்னதாக டிசம்பர் 10, 2025 அன்று தொலைபேசி மூலம் உரையாடினர்.…
கடந்த ஆண்டு வருமான வரி விதிகளில் தளர்வுகள் செய்யப்பட்டபோதிலும், நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கை தெரிவிக்கிறது. வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பதை புள்ளிவிவரங்கள் மூலம் புரிந்துகொள்வோம். வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் மொத்தம் 67.2 மில்லியன் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில், 48.4 மில்லியன் நபர்களுக்கு வரிச் சுமை எதுவும் இல்லாததால், அவர்கள் பூஜ்ஜிய வரி வருமானக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த நேரத்தில், மொத்த வருமான வரிக் கணக்குகளில் வரி செலுத்தாதவர்களின் பங்கு தோராயமாக 72 சதவீதமாக இருந்தது. 2024-25 நிதியாண்டில், வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 55.8…
ஐபிஎல் 2026 தொடரிலிருந்து நீக்கப்பட்ட சில நாட்களிலேயே, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் இணைந்துள்ளார். ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் போட்டியிட்ட பிறகு, முஸ்தாபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு வாங்கியது. அதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த செய்திகள் இந்தியாவில் போராட்டங்களைத் தூண்டின. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ அவரை அணியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. இதன் விளைவாக, ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முஸ்தாபிசுர் ரஹ்மானை தனது அணியிலிருந்து நீக்கியது. ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முஸ்தாஃபிசுர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இணைந்தார். அவரது பங்கேற்பு பிஎஸ்எல்-இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் உறுதி செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், முஸ்தாஃபிசுர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிஎஸ்எல் தொடருக்குத்…
சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எந்ததாக குறிப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது, சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எழுந்தன எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, கிராம கமிட்டியே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப் புகழ்பெற்றவை என்பதால், இவ்விழாக்களை தனிநபர்கள் நடத்துவது ஏற்றதல்ல என்றும், அரசு நிர்வாகமே இப்போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.…
மதுரை செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், மகளிர் குழுக்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் நிகழ்ச்சியில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருமங்கலம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திமுக அமைச்சர் கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்குக் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாக கூறியுள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கடந்த மாதம் 13ம் தேதி புகாளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில்…
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அரசமைப்புக்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக இன்று வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் உறுதியோடு ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாக பிள்ளையார் கோவில் அருகில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளும் உள்ளன. அவ்வாறு இருக்கையில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில்தான் தீபமேற்றுவோம் என்று சில பிரிவினைவாதிகள் முன்வைத்த கோரிக்கைக்கு…
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 இலட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும்…
தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித் ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், மகளிர் குழுக்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நலனுக்காக செய்யப்படுகின்ற திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள் . அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தார் . அவர் அமித்ஷா வா அல்லது அவதூறு ஷா வா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்.…