Author: Editor web3

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர். பீகார் தேர்தலை தொடர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதேபோல், அரசியல்கள் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார பொதுக்கூட்டங்கள் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள் தமிழகத்துக்கு அடுத்த மாதம் தொடக்கத்தில் வருகை தர உள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் , காவல்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை, சி ஆர் பி எப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் தமிழகத்தில் எஸ் ஐ…

Read More

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பிரச்சாரம் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட துயரத்தின் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில் பிறப்பித்த உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி தொடங்கும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றோடு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்டம், கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். எதிர்பார்க்கப்படும் கூட்டத்திற்கு ஏற்ப ஏற்பாடு செய்வதோடு,…

Read More

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே வரும் ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, டெல்லி பாஜக தலைவர்கள் தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன. 28 ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டணியை…

Read More

உணவு மற்றும் குளிர்பானத் துறையின் மாபெரும் நிறுவனமான Nestle , செவ்வாய்க்கிழமை அன்று தனது முக்கியமான சில குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த தயாரிப்புகளில், குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷப்பொருள் இருக்கக்கூடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் SMA, BEBA மற்றும் NAN என்ற பிராண்டுகளின் கீழ் விற்பனை செய்யப்படும் குழந்தை பால் கலவைகள் (infant formula) மற்றும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பால் கலவைகள் (follow-on formula) அடங்கும். இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், உலகம் முழுவதும் எங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனவோ அங்கு அனைத்திலும் திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நெஸ்லே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நிறுவனம் என்ன கூறியது? ஒரு முக்கிய விநியோகஸ்தரிடமிருந்து பெறப்பட்ட மூலப்பொருளில் தரக் குறைபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்…

Read More

உலகெங்கிலும் உள்ள நாடுகள் வெனிசுலா நிலைமை குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டித்துள்ளன. அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளாலும், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டதாலும் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், வெனிசுலா மக்களின் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மையான கவலை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய எஸ். ஜெய்சங்கர், வெனிசுலா மக்களின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பேசி ஒரு தீர்வை எட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது, “நேற்று நாங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டோம் என்று நினைக்கிறேன், எனவே நீங்கள் அதைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால், சமீபத்திய இந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். ஆனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போது ஒன்றிணைந்து பேசி, வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும்…

Read More

அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள குறைகள் குறித்து புகார் அளிக்க ஏதுவாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை (Pongal) சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக  வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது மேலும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read More

வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த 2 பேர் அடித்துக் கொல்லப்பட்டத்தை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்பலைகள் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும், மீறினால் போட்டி நடத்தும்போது ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என்றும் ஆன்மிக தலைவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பல்வேறிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்தசூழலில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ரிலீஸ் செய்யுங்க என கேகேஆர் நிர்வாகத்திற்கு பிசிசிஐ அறிவுறுத்திய நிலையில், கடந்த 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்நிலையில் முஸ்தஃபிசூரை வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வரமாட்டோம் என தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், “தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் கவலைகளைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு,…

Read More

புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரத்தில் வருகிற 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு  இன்று (ஜனவரி 7) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட இணையதள பக்கமான madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக இன்று மாலை 5 மணி முதல் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், இந்த…

Read More

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி திமுகவை ஆட்சியில் இருந்தும் இறக்கவேண்டும் என்ற முனைப்பில், பாஜக, அதிமுக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி பேசியதாவது, எங்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம், கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டோம், தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவாகிவிட்டது என்று கூறினார். இந்தநிலையில், அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பாமக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று…

Read More

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன. 7) தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,960 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,830க்கும், ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283-க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ. 271க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,71,000க்கும்…

Read More